21 நவம்பர் 2013

நான் முதலில் அகமுடையார்; அதன்பிறகு தேவர்!

இன்னைக்கு பலபேரு இங்கே இணையத்தில் வீரவசனம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். என்னை பிரிவினைவாதியென்று சொல்லி மகிழ்ச்சியடைகிறார்கள். களத்திலும் சரி, இணையத்திலும் சரி நான் செயல்பாட்டில் இருந்தவன்; இருக்கின்றவன் தான். அதைப்பற்றி விளம்பரப்படுத்தி கொள்ளவோ, மிகைப்படுத்தி பகிரவோ எனக்கு விருப்பமில்லை. ஆனால் இன்று இதை சொல்வதால் எனக்கு யாரும் விருது கொடுக்க போவதில்லை. ஆனால், என் பங்களிப்பை பற்றி இங்கே தெளிவாக்க விரும்புகிறேன்.

மேலும் இங்கு சிலர்... போற இடங்களையெல்லாம் போட்டோ எடுத்து இணையத்தில் பகிர்ந்து கொண்டு செயல்வீரர்கள் போல காட்டிக்கொள்ள முனைகிறார்கள்.அவர்களை போல பெருமை பட்டுக்கொள்ள முடியாவிட்டாலும், என் பங்குக்கு இணையத்தில் இதுவரை நான் செய்த சிலவற்றை இங்கே பகிர்கிறேன்.

01. இணையத்த்தை பொருத்தவரை ஆரம்பத்தில் தேவரினத்தை அடையாளப்படுத்திய ஒரே இணையம்: www.thevar.co.in என்பதே ஆகும். அப்போது அந்த இணையதளத்தில் கட்டுரை எழுதி பரமரித்தவர்களான திரு வெயிலணன், திரு. ஜெ.முத்துராமலிங்கம், திரு.முகுந்தன் உள்பட அனைவருமே என்னைவிட வயதில் மூத்தவர்கள் என்றபோதும், சிறியவனான எனக்கும் அவர்களுக்கு இணையான இடமளித்து என்னையும் எழுதவும் - அந்த இணைய தளத்தை பராமரிக்கவும் முழுசுதந்திரம் அளித்தனர். அப்போது முதல் இணைய செயல்பாட்டில் இருக்கின்றவன்.

02. இப்போதுள்ள ஃபேஸ்புக் - ட்விட்டர் போன்ற சமூகதளங்களுக்கு முன்னோடியாக இருந்த ஆர்குட் - கூகிள் பஸ் என்ற சமூக வலைதளங்களில் தேவரினம் சார்பாகவும், தேவரினத்திற்கு எதிரான ஆர்குட் கம்யூனிட்டிகளில் நடக்கும் விவாதங்களிலும் இரவு பகல் பாராமல் விவாதம் செய்தவன். அப்போது மிகபிரபலாக இருந்த வால்பையன் - ஆல் இன் ஆல் அழகுராஜா போன்றவர்களோடு தொலைபேசியின் வாயிலாக நேரடியாக தனி ஆளாக சண்டையிட்டவன்.

03. ஆர்குட் குழுமத்தில் அப்போதே 4000க்கும் மேற்பட்ட உறவுகளை உள்டக்கிய தேவர் குழும விவாதங்களில் பங்கெடுத்தவன். அந்த குழும உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு, 2009ம் ஆண்டு வாக்கிலேயே உடையாளூர் ராஜராஜ சோழன் சமாதிக்கு சென்று வணங்கி வந்த அணியில் இடம்பெற்று அதை இணையத்திலும் - யூட்யூபிலும் பகிர்ந்தவன். அப்போது இங்குள்ள பலருக்கு ராஜராஜன் யாரென்றும் தெரியாது. அவரது சமாதி எங்கிருக்கிறது என்பதும் தெரியாது.

04. பிறகு தவிர்க்க முடியாத காரணத்தால், www.thevar.co.in யென்ற இணையமும் அதிலுள்ள பதிவுகளும் முற்றிலுமாக இழந்தபின்னால், பேக்-அப் தேவைக்காக அனைத்து முக்கிய பதிவுகளையும் www.thevarthalam.blogspot.com வலைதளத்தில் சேகரித்து வைத்தவன். அந்த பதிவுகளே மீண்டுமொரு இணையதளத்தை உருவாக்கும்போது தேவைப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

05. அதன் பிறகு, திரு குவைத் பாண்டியன் பங்காளியின் பண உதவியோடு www.thevarthalam.com இந்த இணையதளத்தை உருவாக்க காரணமாக இருந்தவன். இன்று தேவருக்கான ஒரே இணையதளமாக இருக்கக்கூடிய தேவர்தளத்தின் பெயரை வைத்தவன். சிலர் மீதான மனக்கசப்பால் இப்போது தேவர்தளத்தின் செயல்பாட்டில் இல்லாதவன்.

06. தமிழ் விக்கிபீடியாவில் கள்ளர் - மறவர் களுக்கு தனித்தனி பக்கம் இருந்தபோதும், அகமுடையார்களுக்கு யென்று எந்த பக்கமும் அதுவரை இருக்கவே இல்லை என்ற ஆதங்கத்தோடு தனியாக http://ta.wikipedia.org/wiki/அகமுடையார் யென்ற பக்கத்தை உருவாக்கியவன். இன்றைக்கு அகமுடையாருக்கு என்று ஒரு பக்கம் இருக்கிறதென்றால் அதை உருவாக்கியவன் என்ற ஒற்றை சந்தோசமே எனக்கு போதும். ஏனெனில், அப்போதும் கள்ளருக்கும் - மறவருக்கும் தனித்தனி விக்கிப்பீடியா பக்கம் இருந்தது. ஆனால், அகமுடையாருக்கு யென்று ஒருபக்கத்தை உருவாக்க கூட மற்ற யாருக்கும் மனமில்லை.

07.. ஃபேஸ்புக்கில் Thevar-Mukkulathor யென்ற பக்கத்தை முதலில் உருவாக்கியவன். இதை தவிர இன்றும் ஃபேஸ்புக்கில் பல உறுப்பினர்களை கொண்ட பல ஃபேஸ்புக் ஃபேஜ்களான முகநூல் பக்கங்களை உருவாக்கி அதை செயல்பாட்டிலும் வைத்திருப்பவன்.

08. தேவர் ஜெயந்தி தடையை உடைப்போம் , திராவிடத்தை ஒழிப்போம் என்ற ஃபேஸ்புக் ஃபேஜ்களை உருவாக்கியவன். அந்த பக்கங்களை உருவாக்கியதோடு நின்றுவிடாமல், அனைவரது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக பல உறவுகளை அட்மினாக நியமித்தி அதிக உயிரோட்டத்துடன் தடைப்பற்றிய செய்திகளை பகிர காரணமாக இருந்தவன்.

09. இதைத்தவிர www.nochchi.com யென்ற இணையத்தை உருவாக்கி, அதை தலித் அல்லாத தமிழ்சமுதாயத்திற்கான பொதுதளமாக பாவிக்க முயற்சி எடுத்து சில கட்டுரைகளை எழுதியவன்.

10. இணையத்தில் நுழைந்த நாள் முதல் வினவு - கீற்று உள்ளிட்ட பல தலித் சார்புள்ள இணையதளங்களில், தேவரினத்திற்கு எதிரான பதிவுகளுக்கு கண்டனத்தையும், தேவரினம் சார்பான என்னாலான கருத்துகளை பகிர்ந்து கொண்டிருப்பவன்.

11. இதைத்தவிர களப்பணியை விவரித்து சொல்ல விரும்பவில்லை. திருக்காட்டுப்பள்ளியில் - ஒன்பத்துவேலி கிராமத்தில் எரிக்கப்பட்ட தேவரின (கள்ளர்) வீடுகளை நேரில் பார்வையிட்டு ஆறுதல் சொல்லப்போனவன். தடைப்போட பட்ட இந்த தேவர்ஜெயந்தியை பசும்பொன்னில் கொண்டாட நினைத்து ஸ்ரீதேவரை வணங்கி வந்தவன். என் உணர்வின் அடிப்படையில் அங்கே பசும்பொன்னில் களமாடிய செய்திகளை மற்றவர்கள் போல போட்டோ எடுத்து போட்டு பெருமைத்தேடிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், எனது உணர்வை என்னோடு பசும்பொன்னுக்கு வந்திருந்த முரளிநடராஜன், கணேசமூர்த்தி, ஜாக் துரைப்பாண்டியன் போன்றவர்களுக்கு தெரிந்திருக்கும்.

12. பொதுவில் சொல்ல முடியாத இன்னும் பல விசயங்களை இணையத்திலும், வெளியிலும் களப்பணி ஆற்றிய என்னை, சிலர் திரைமறைவு வேலைகள் செய்து உட்பிரிவுவாதி யென்று பட்டம் கொடுக்கின்றனர். ஒரு வருடத்திற்கு உள்ளாக இணையத்தில் செயல்படும் பலர் போராளியாக உருவெடுத்துவிட்டதால், அவர்களுக்கு இந்த இமலாதித்தன் ஏளனமாக தெரியலாம். உட்பிரிவு பாசத்தோடு தனித்தனியாக குருப்பாக பேசி முடிவெடுத்து இணையத்தில் செயல்படும் அனைவரை பற்றியும் எனக்கு தெரியும். அவர்களால், நான் உட்பிரிவுவாதி என்று அவதூறு பரப்பப்பட்டாலும் அதைப்பற்றி கவலைப்பட போவதில்லை. அவர்களை போன்ற இரட்டைவேடம் போடும் விலாங்கு மீன்களுக்காக என்றும் என் சுயத்தை இழக்கமாட்டேன்.

நான் முதலில் அகமுடையார். அதன்பிறகு தேவர். ஏனெனில், நான் அகமுடையாராக இருக்க முடிவாதலேயே தேவராகவும் இருக்க முடிகிறது.

- இரா.ச.இமலாதித்தன்.

2 கருத்துகள்:

  1. நன்றி திரு இரா.ச.இமலாதித்தன். அவர்களே ,தங்களின் பணி மேலும் தொடர வாழ்த்துகிறேன்

    மு. செல்லபாண்டியன்
    செங்கை

    பதிலளிநீக்கு