05 டிசம்பர் 2014

தென் தமிழகத்தில் நடந்தேறும் தொடர்ச்சியான படுகொலைகளுக்கு தீர்வு என்ன?

01. அஜீத் பட டீசருக்கான அதிக லைக்குகளால் மகிழ்ச்சி.

02. ஈ.வெ.ரா. விசயத்தில் ஹெச்.ராஜாவுக்கு ஆதரவு.

03. முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பங்கு கொள்ளும் முதல் சட்டபேரவை என்பதால் பெருமிதம்.

04. மு.கருணாநிதிக்கு இருக்கை தரவில்லை என்ற கோபம்

இப்படியாக தேவரின இளைஞர்கள் அரசியல்-சினிமா என ஈர்க்கப்பட்டு கிடக்கும் வேளையில், நேற்று(05.12.2014) 20 வயதுடைய எம்.முத்துராஜா என்ற தேவர் சாதியை சேர்ந்த ஓர் இளைஞனை 20 பேர் கொண்ட சாதிவெறி கும்பல், கோடாறியால் தலை, உடல் என கோராமாக வெட்டி படுகொலை செய்துள்ளது. காரணம் என்னவெனில் 2012ம் ஆண்டின் நடைபெற்ற தேவர் ஜெயந்தி அன்று தேவரின இளைஞர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசிய கொலை செய்தவனை, விசாரணைக்கு அழைத்து வரும்போது பழிக்கு பழியாக கொலை செய்தனர். அந்த பழிக்கு பழியான கொலை நடந்த அதே நாளில், யாராவது ஒரு தேவர் சாதியை சேர்ந்த ஒருவனை கொலை செய்ய வேண்டும் என்ற குரூர நோக்கத்தோடு நேற்று இந்த படுகொலை நடந்தேறியுள்ளது.


இதே மாதிரி தலித் இளைஞர் கொலை செய்யப்பட்டால் லட்ச கணக்கில் உடனடியாக நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசாங்க வேலையென அரசாங்கம் உடனடியாக பட்டுவாடா செய்யும். கூடவே, வினவு போன்ற நக்சல்பாரி இணையங்களும், நடுநிலைவாதியென்ற முகமூடிகளுடன் உலவும் எழுத்தாளர்களும், பக்கம் பக்கமாக கண்டனங்களை தொடர்ச்சியாக பதிவு செய்வார்கள். செய்தி சேனல்களும் ஃப்ளாஷ், ஸ்க்ரோலிங் என லைவ் ரிப்போர்ட்டை கொலை களத்திலிருந்து போட்டிப்போட்டு கொடுக்கும். மேலும், உண்மை அறியும் குழு, மனித உரிமைகள் அமைப்பு, தலித் சாதி அமைப்புகள், தேசிய தலித் வாரியம் என பலரும் களத்தில் சாதிவெறியென கூச்சலிட்டு அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுப்பார்கள்.

ஆனால், வழக்கம் போல விபச்சார ஊடகங்கள் மெளனித்திருக்க, சமூக ஊடகங்களில் தேவர் சாதி இளைஞர்கள் மட்டும் உணர்ச்சி பொங்க பதிவிட்டு பகிர்வார்கள் என்பது இந்த சம்பவத்தின் பின்னாலும் உணர முடிகின்றது. ஆனால் முக்குலத்து சாதி அமைப்புகள் ஒவ்வொரு ஊருக்கும் தெருவுக்கு தெரு இருந்தாலும், அக்டோபர் மாதம் மட்டும் வாடகைக்கு வண்டி பிடித்து பசும்பொன் வந்து போவது தான் அவர்களின் கொள்கை என்பதால், இந்த சம்பத்தின் பின்பும் எந்தவொரு பெரிய சாதி அமைப்பும் ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்கவில்லை. இதுவும் ஏற்கனவே தெரிந்த ஒன்றுதான் என்பதால் எந்தவித சலனமும் தேவர் சாதி அமைப்புகள் மீது எழவில்லை.


தென் தமிழகத்தில் பழிக்கு பழி, கொலைக்கு கொலை என தொடர்ச்சியாக அரங்கேறினால், பல அப்பாவி இளைஞர்கள் தொடர்ச்சியாக கொலை செய்யப்படுவதை யாராலுமே தடுக்க முடியாது. இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என யாராவது ஒருவரால் கொலைக்கு சம்பந்தபட்டவர்கள் பழி தீர்க்கப்பட்டு கொண்டே இருப்பர்கள். இதற்கான நிரந்தர தீர்வை திராவிட தலைமை கொண்ட எந்த அரசாங்கமும் நிச்ச்யமாக எடுக்காது. ஏனெனில் இதை வைத்து தானே, அவர்களால் தென்னகத்தில் அரசியல் செய்ய முடியும். காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் - பார்வார்ட் ப்ளாக் மோதலானது கட்சிகளை தாண்டி, இன்று தேவர் - பள்ளர் மோதலாக சாதிவெறியாக உருமாறி நிற்கின்றது. எனவே இந்த சாதிய மோதலுக்கான நிரந்தர தீர்வை தேவர் மற்றும் பள்ளர் சாதியை சேர்ந்த இளைஞர்களால் மட்டும் தான் எட்ட முடியும். மற்றபடி எல்லா சாதி அரசியல் தலைவர்களும் இதில் அரசியல் ஆதாயம் தான் தேட முயல்வார்களே தவிர, நிரந்தர தீர்வை நிச்சயம் எடுகக் விட மாட்டார்கள். இதை வருங்கால இளைய தலைமுறையினர் புரிதல் கொண்டால் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்த காரணத்திற்காகவே கொலை செய்யப்படும் அப்பாவிகளை இனியாவது காப்பாற்ற முடியும். ஜெய்ஹிந்த்

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக