26 நவம்பர் 2014

முக்குலத்து அரசியல்வாதிகளின் கவனத்திற்கு

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியிடம் இருந்தாவது முக்குலத்து அரசியல் வாதிகள் கற்றுக்கொள்ளட்டும். ஆண்ட பரம்பரை, தேவன்டா, எக்குலமும் வாழனும் முக்குலமே ஆளனும் - இப்படியான வார்த்தை ஜாலங்களால் மட்டும் அரசியலில் நிலையான ஓரிடத்தை பிடிக்க முடியாது. மாறிக்கொண்டிருக்கும் காலத்திற்கு தகுந்த தெளிவான அரசியல் பாதை வேண்டும். எல்லாரையும் பகைத்து கொண்டு எப்படி அரசியல் செய்ய முடியும்? அனைத்து தமிழ்சாதிகளையும் அரவணைத்து புதிய அரசியலை கட்டியெழுப்புவதை பற்றியெல்லாம் இனியாவது யோசிக்கட்டும்.

புதிய தமிழகம் கட்சி ஏற்பாடு செய்திருக்கும் இப்பயிலரங்கதில் சர்வதேச, தேசிய, மாநில அளவிலான அரசியல் சூழ்நிலைகள், புதிய தமிழகம் கட்சியை மாநில அளவில் முதன்மை அரசியல் கட்சியாக முன் எடுத்து செல்வது, தமிழகத்தில் தற்பொழுது நிலவக்கூடிய சமூக சிக்கல்கள், சட்டங்கள், ஆட்சி மாற்றங்கள், சுகாதாரம், சுயஒழுக்கம், கட்சியை விரிவாக்கம் செய்தல், ஊடகங்கள் தோற்றுவித்தல் என பல தரப்பட்ட விசயங்களும் இப்பயிலரங்கதில் விவாதிக்கப்பட போகிறார்கள்.

”வீரமற்ற விவேகம் கோழைத்தனம்
விவேகமற்ற வீரம் முரட்டுத்தனம்”

இப்படி சொன்ன பசும்பொன் தேவரின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி அரசியல் செய்யும் முக்குலத்து அமைப்புகளே, இனியாவது இப்படியான முன்னெடுப்புகளை எடுங்கள். "நீ யாரு எங்களுக்கு சொல்றது? நாங்க அக்டோபர் மாசம் வாடகைக்கு பத்து பதினைஞ்சு வண்டி எடுத்து பசும்பொன் பக்கம் போனாலே எங்க அரசியல் முழுமையாகி விடும்!" என நினைக்கும் உங்களை போன்றோர்களால் என்றைக்கும் ஒரு வார்டு கவுன்சிலராக கூட ஆக முடியாது. வழக்கம்போல சாதி மக்களின் எண்ணிக்கையை கணக்கில் காட்டி(கொடுத்து) திமுக - அதிமுகன்னு மாறி மாறி ஒரிரு சீட்டுக்காக கையேந்தி நிற்கத்தான் முடியும். தமிழக அரசியலில் கால் பதித்திருக்கும் எல்லா சாதி அமைப்புக்கும் சக்தி வாய்ந்த ஓர் ஊடகம் இருக்கு. ஆனால் முக்குலத்தோருக்குன்னு ஒரு பத்திரிகை, தொலைக்காட்சின்னு ஏதாவது ஓர் ஊடகம் இருக்கா? இனியாவது உருப்புடியா ஏதாவது பண்ணுங்கய்யா. மீசையை மட்டும் வச்சிக்கிட்டு ஒரு மயிரும் புடுங்க முடியாது. மூளையும் வேணும்.

- இரா.ச.இமலாதித்தன்

சுட்டி:
https://www.facebook.com/DrKrishnasamy/photos/a.322228447945154.1073741827.322218957946103/393972464104085

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக