13 நவம்பர் 2014

சுய பெருமைக்கு பின்னாலுள்ள கோபம்!

தொலைக்காட்சி பிரபலம் ஒருவரின் கவிதை புத்தகத்தை படித்த போது தான் தெரிஞ்சது, அவரை விட என் எழுத்துகள் பன்மடங்கு மேம்பட்டதென்று. நானும் 2009 லிருந்து கவிதைங்கிற பேருலயும், கட்டுரைங்கிற பேருலயும் கண்டதையும் கிறுக்கி வச்சிருக்கேன். புகழ் போதைக்கு இங்கே பலரும் அடிமை என்றாலும் புகழுக்காக இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் ஓர் அங்கீகாரத்திற்காகவாது என்னுடைய நூறுக்கும் மேற்பட்ட கிறுக்கல்களை தொகுத்து ஒரு கவிதை நூலை வெளியிட வேண்டுமென்பது நெடுநாளைய ஆசை. அதற்கான வாய்ப்பு தான் இதுவரையிலும் உருவாகவில்லை. அடுத்து பாரபட்சமில்லாத ஒரு நேர்மையான வரலாற்று நாவல் எழுத வேண்டுமென்பதும் இன்றைய நாள் வரை வெறும் கனவாகவே இருந்து வருகின்றது. இறைருள் இனியாவது கிடைக்குமென நம்பிக்கையோடும், ஆறுமுகனின் அருளோடும் ஆறாவது ஆண்டில் நுழைகின்றேன். வாண்ட்டடா வண்டியில ஏறுற என்னைய நம்புங்கய்யா, சத்தியமா நானும் கவிஞன் தான், எழுத்தாளன் தான்!


இன்னைக்கு ஆண்ட்ராய்ட் மொபைல் வந்ததும் நெட் கார்டு ரீசார்ஜ் செய்து கொண்டு வீரவசனம் பேசும் பலருக்கும், ஆறெழு வருடங்களுக்கு முன்பு நடந்த பல ப்ளாஸ்பேக் தெரிய வாய்ப்பில்லை. அன்றைக்கு ஆக்டிவா இருந்த பல பேரு இன்னைக்கு பொண்டாட்டி பிள்ளைன்னு தடம் மாறி விட்டார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து இதே நிலைதான், இன்றைக்குள்ள வீரவசனங்களுக்கும் உருவாகும். அது தெரியாமல் ஒட்டு மொத்த இனத்தையே தன் கைகளுக்குள் கொண்டு வந்து விட்டதாய் பிரம்மை பிடித்து நிற்பதை பார்க்கையில் பரிதாபமாகத்தான் இருக்கின்றது. நிலையில்லா இவ்வுலகில் நிலைத்து நிற்பார் யாருமில்லை!

இன்னைக்கு தேவர் தளம் என்ற இணையதளம் இருக்கிறதென்றால் அதில் என்பங்கும் கணிசமாக உண்டு. www.thevarthalam.blogspot.com என்ற வலைப்பதிவிலுள்ள பதிவுகளைத்தான் thevarthalam@mail.com என்ற மெயில் ஐடி உருவாக்கி பிறகு காப்பியெடுத்து அதை பின்னாட்களில் www.thevarthalam.com க்கு அப்லோட் செய்தோம். பண உதவி ஒரு பைசா கூட என்னுடையது இல்லையென்றாலும் லோகோ, இணையதள பெயர், டெம்ப்ளேட் டிசைன், பேஜ்/டேப் தலைப்புகளென அனைத்திலும் அடியேனுக்கும் பங்குண்டு என்பதை சொல்வது காலத்தின் தேவையாகிறது.

#‎
சுய_பெருமை‬
!ன்னு கூட வச்சிக்கலாம்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவில் முக்குலத்தோரான கள்ளருக்கும், மறவருக்கும் தனித்தனி பக்கங்கள் இருந்தாலும், அகமுடையாருக்கு என்ற தனிப்பக்கம் ஏதுமில்லாமல் இருந்த போது, 25 டிசம்பர் 2010ம் ஆண்டு அந்த குறையை போக்கி, அகமுடையாருக்கென தனி பக்கத்தை அடியேன் தான் உருவாக்கினேன்.

இதை ‪#‎சுய_பெருமை‬!ன்னு கூட வச்சிக்கலாம்.

http://ta.wikipedia.org/w/index.php…



நாளைக்கே ஒரு லெட்டர் பேடு கட்சி உருவாக்கி மாநில தலைவராக கூட வரலாம். குறைந்த பட்சம் ஆளில்லா டீக்கடை போன்றதொரு அமைப்பில் வட்ட செயலாளராக கூட வரலாம். ஆனால், ஒருநாளும் வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது. அது தான் டிசைன்.

 - இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக