19 நவம்பர் 2014

சின்ன கலைவாணருக்கு வாழ்த்துகள்!


கலவரத்துக்கு பெயர் போன தென்தமிழகம் தான் இவரது பூர்வீகமென்றாலும் கலகலப்புக்கு சொந்தக்காரர்.

வேலையிலிருந்த பட்டதாரிகள் நிறைந்த அந்த காலத்திலேயே இவர் எம்.காம் முதுகலைப் பட்ட தாரி.

தமிழ்நாடு தலைமை செயலகத்தின் ஜூனியர் உதவியாளராக பணிபுரிந்த முன்னாள் அரசு ஊழியர்.

சிவ கார்த்திக்கேயன், மதுரை முத்துக்கு முன்பாகவே ஸ்டேன்ட்-அப் காமெடியை முதன்முதலில் பிரபல படுத்திவர்.

ஏ.பி.ஜெ. அப்துல் கலாம், ரஜினி காந்த, ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற பிரபலங்களை பேட்டியெடுத்தவர்.

ரஜினி, கமலை போலவே இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் தான் இவரை அறிமுக படுத்தினார்.

1987ல் ”மனதில் உறுதி வேண்டும்” திரைப்படம் மூலம் திரைத்துறையில் முத்திரை பதித்தார்.

1990களின் தொடக்கத்தில் துணை நடிகராகத் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி, இப்பொழுது பிரபல நகைச்சுவை நடிகராக விளங்குகிறார்.

சினிமாவில் சமூக மூடநம்பிக்கைக்கு எதிரான பல சீர்திருத்த கருத்துகளை மிக ஆழமாக பதிவு செய்து வரும் இவரின் மனதுக்கு மிகவும் நெருங்கியவர் ஷீரடி சாய்பாபா.

2002-ல் ‘ரன்’, 2003ல் ‘சாமி’, 2004-ல் ‘பேரழகன், 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக சிறந்த நகைச்சுவை நடிகருக்கான நான்கு ஃபிலிம்ஃபேர் விருதுகளை பெற்றவர்.

'உன்னருகே நானிருந்தால்’, 2002-ல் ‘ரன்’, 2003ல் ‘பார்த்திபன் கனவு’, 2007-ல் ‘சிவாஜி’ போன்ற திரைப்டங்களுக்காக தமிழ் நாடு அரசின் நான்கு மாநில விருது அரசு விருகளை பெற்றவர்.

மேலும், ‘எடிசன் விருது’, ‘கொடைக்கானல் பண்பலை வானொலி விருது’, ‘ஐ.டி.எஃப்.ஏ விருது', ‘தேசிய தமிழ் திரைப்பட விருதுகள்’ பெற்றவர்.

குறிப்பாக இந்திய அரசால் ’பத்மஸ்ரீ’ விருதையும் பெற்றவர்.

”நாட்டில் வறட்சி ஏற்பட்டதற்கு நாம்தான் காரணம், வறட்சியைப் போக்கும் வகையில் சுமார் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவேன்” எனக்கூறி ’க்ரீன் கலாம்’ திட்டத்தினால் பல லட்சம் மரக்கன்றுகள் ஊன்றி பசுமை புரட்சி செய்து வருபவர்.

இயற்பெயரான விவேகனாந்தனிலிருந்து, சினிமாவால் விவேக் ஆனவர்.

அகவை 54ல் அடியெடுத்து வைக்கும் ”சின்ன கலைவாணர்”, ”ஜனங்களின் கலைஞன்” அண்ணன் திரு. விவேக் அவர்களுக்கு என் மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள். எம்பெருமான் திருமுருகன் அருளோடு வாழ்க வளமுடன்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக