08 நவம்பர் 2014

வண்ணங்களும் வணக்கத்துக்குரியவையே!

அனைத்து வண்ணங்களிலும் ஓர் அழகு ஒளிந்திருந்தாலும், பசுமைக்கு நிகரான அழகு வேறேதுமில்லை. என் சிறு வயது முதலே மிகவும் பிடித்து போன நீலம், பச்சைக்கு பிறகு சிவப்பும் பிடித்துப்போய் விட்டது. RGB என்ற இந்த மூவண்ணங்கள் தான் மற்ற அனைத்து விதமான வண்ணங்களுக்கும் மூலாதாரமாக இருக்கின்றதென்றாலும், இந்த மூன்று வண்ணங்களுக்கு பின்னால் பல அறிவியலும் ஆன்மீகமும் கூட நிறைந்திருக்கின்றன. உதாரணமாக பச்சையை பெருமாளுக்கும், கருநீலத்தை இராமனுக்கும், சிவப்பை சிவன் மற்றும் எம்பெருமான் திருமுருகனுக்கும் உரிய நிறமாக சொல்வார்கள். மேலும், நவக்கிரங்களான புதனுக்கு பச்சையையும், சனிக்கு - நீலத்தையும், செவ்வாய்க்கு - சிவப்பையும் வஸ்திரங்களாக அணுவித்தும் வணங்குவார்கள். இது ஆன்மீகம். அதன் தொடர்ச்சியாக, குளோரினுக்கு - பச்சை, நைட்ரஜனுக்கு - நீலம், ஆக்சிஜனுக்கு - சிவப்பு என்றும், மேலும் எலக்ட்ரான் - புரோட்டான் - நியூட்ரான் போன்ற அணுக்களுக்குள்ளும் இந்த பச்சை - நீலம் - சிவப்பு வண்ணக்குறியீடுகள் மூலமும் அறிவியலிலும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். நிச்சயம் ஒருநாள், விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒற்றைப்புள்ளியில் சங்கமித்து, அறிவியலும் ஆன்மீகத்தோடு இணையும். அதன் பெயர் தான் இறைவன் என்று அப்போது புரியும்.

- இரா.ச.இமலாதித்தன்

கொசுறு:

சேனைக்கிழங்கு - நாக்கை அறிக்கும்; வள்ளிக்கிழங்கு - நாக்கில் இனிக்கும். இதுல இருந்து என்ன புரியுது? முதல்ல இருக்கிறத விட இரண்டாவதா வரதுதான் இனிக்கும். அதுனால தான் தெய்வசேனை இருக்கும்போதே வள்ளி மீதும் எம்பெருமான் திருமுருகன் காதல் வசப்பட்டுட்டாரு போல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக