17 அக்டோபர் 2014

சாதி தேவையில்லை, ஆனால் சாதிக்கொரு முதல்வர் தேவை!

தமிழகத்தில் அடுத்த ஆறு மாதத்தில் சுழற்சி முறையில் (கவுண்டர், வன்னியர், தலித் என) ஒவ்வொரு சாதி எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வர் பதவி வழங்கப்படலாம். - செய்தி.


இந்த முடிவு உண்மையெனில் அது முட்டாள் தனமானது என்பதை செல்வி ஜெயலலிதா பின்னாட்களில் புரிந்து கொள்வார். ஓ.பி.எஸ் முக்குலத்து சமுதாயம் என்றாலும், தனிப்பட்ட முறையில் சாதிக்காக எதையும் செய்ததில்லை. ஆனால் பரமக்குடி சுந்தர்ராஜன் - பள்ளர் சாதி என்பதால், அமைச்சராக இருக்கும் போதே பல விசயங்களை தன்னுடைய சாதிக்கு செய்கிறார் என்பது அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டாக இருக்கின்றது. முக்கியமாக, ஓபிஎஸ் உள்ளிட்ட ஒருசில பேர்களை தவிர இரண்டாம் கட்ட தலைவர்களே அதிமுகவில் இல்லை. மூன்றாம் கட்ட தலைவராக இருக்கும் ஒருவரை, சாதியை காரணம் காட்டி முதல்வர் ஆக்கினால் ஆட்சி ஏளனமாக்கப்படும். குறிப்பிட்டவர்களின் ஆட்சிக்காலத்தில் சாதிய முத்திரை குத்தப்படவும் வாய்ப்பிருக்கின்றது. உட்கட்சிக்குள் யார் பெரியவன் என்ற ஈகோ வளரும். உள்ளடி வேலைகளால் ஆட்சிக்கு களங்கமும் விளையும். எனவே, இப்போது உள்ள நிலையில் ஓபிஎஸ்சை அனைவரும் ஏற்று கொண்டு விட்டார்கள். அதனால் அவரே மீதமுள்ள ஆட்சிக்காலத்தையும் முழுமையாய் ஆள்வதுதான் விவேகமாக அமையும். பார்க்கலாம், புரளிகளை கிளப்பும் இந்த மஞ்சள் பத்திரிகைகளின் ஆருடத்தை...

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக