16 அக்டோபர் 2014

நாகையின் நாயகர்கள்!

கண்ணகி, காரைக்கால் அம்மையார், கம்பன் மட்டுமல்ல, இந்த இமலாதித்தனும் பிறந்த ஊருதாங்க நம்ம நாகப்பட்டினம்!

நாகப்பட்டினத்தில் பிறந்த கம்பனுக்கு கல்யாணம் ஆய்டுச்சா? இல்லையா?ன்னு தெரியல. இவரை தவிர நாகப்பட்டினத்தில் பிறந்த காரைக்கால் அம்மையாருக்கும், கண்ணகிக்கும் கல்யாணம் ஆனது என்னவோ உண்மைதான். ஆனால், கல்யாணத்துக்கு பிறகு தான் ஒரு மிகப்பெரிய வரலாறே உருவானது. ஒன்று மாங்கனியால்! இன்னொன்று சிலம்பினால்! இன்று இருவருமே வள்ளுவர் சொன்னது போல தெய்வத்துள் வைக்கப்பட்டு விட்டனர். இதை எதுக்கு சொல்றேன்னா, நாங்களும் நாக்கு தமிழ் மணக்கும் நாகப்பட்டினத்து காரன் தான்... எங்களுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை. கல்யாணம் ஆனதுக்கு அப்பறமா நாங்களும் தெய்வம் தான்!

”எப்போ கல்யாணம்? எப்போ கல்யாண சாப்பாடு போடுவீங்க? சீக்கரமா மெரேஜ் ட்ரீட் கொடுங்க.”ன்னு ஒருநாளைக்கு ரெண்டு பேராவது சுழற்சி முறையில் இப்படி கேட்குறதுனாலேயே, இனி நித்தியானந்தா மாதிரி ஆய்டலாம்ன்னு இருக்கேன்.

சீடர்கள்* தொடர்புக்கு:-

ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சா இமலாதித்தனந்தா
ஆதித்த பாலபீடம்
ஆதித்தனந்தபுரம்
நாகப்பட்டினம்.

( *பெண்களுக்கு முன்னுரிமை )


- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக