18 அக்டோபர் 2014

தேவனும் தொட்டி மீனும்!

தேவர் சாதியினரை பழமைவாதி எனவும், தொட்டி மீன்கள் என்றும் சிலர் இங்கே சொல்வதை அறிய முடிகின்றது. எனக்கு இந்த தொட்டி மீன்களை பற்றியும் தெரியும். கூடவே விலாங்கு மீன்களை பற்றியும் தெரியும். ஏனெனில் தொட்டி மீனாவது பழமைவாதி போல கிணற்று தவளையாக இருந்துவிடும். ஆனால் இந்த விலாங்கு மீன் என்பது, மீனுக்கு முகத்தையும் – பாம்புக்கு வாலையும் காட்டி உயிர்பிழைக்கும். அது போலத்தான் இங்கே பல சாதி ஒழிப்பு போராளிகள் இருக்கின்றனர். வெளியில் தலித்/ சிறுபான்மை/ சாதி ஒழிப்பு/ ஆதிக்க சாதிவெறி யென பேசி விட்டு, சாதிய அடிப்படையில் கிடைக்கும் சலுகைக்கு பின்வாசலை ஏறுவர்.

தேவன் என்பதில் என்ன போலி பெருமை இருக்கின்றது. இதில் என்ன போலியை கண்டு பிடிக்கின்றனர் என்பதே தெரியவில்லை. வழி வழியாக என் பாட்டன் அடைக்கலத்தேவன், தாத்தன் இராமமிர்த தேவர், என தந்தை வழியாக உபயோகப்படுத்தி வந்த தேவன் என்ற பட்டத்தை நான் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கு? இதை பெருமையாகவோ – சிறுமையாகவோ – போலியாகவோ நான் நினைத்ததில்லை. இது எனக்கான அடையாளம் அதில் பெருமை என்று மற்றவர்கள் நினைத்தால் நான் செய்ய முடியும்? அதிலும் போலி பெருமையென அவர்கள் சொல்வதில் எனக்கு எந்தவித கவலையுமில்லை. இந்த அடையாளம் தேவையா என்று அவர்களும் பதிலுக்கு கேள்வி கேட்கக்கூடும். அடையாளமில்லாமல் இங்கே எதுவுமில்லை. அது உயிருள்ள அனைத்துக்கும் ஓர் அடையாளமுண்டு. அதுபோலத்தான் இந்த தேவன் என்பதும். இங்கே தேவன் என்பதால் எந்த போலியும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

 
இங்கே பெரும்பாலானோரின் எண்ணமாக ஆட்சிபீடத்தில் இருக்கும் தேவரின அரசியல் வாதிகளை பற்றியே பேசுகின்றனர். எதார்த்தமாக யோசித்து பார்த்தால், பணம் பதவி புகழ் என்பதெல்லாம் கிடைக்கும் என்று தோன்றினால் சாதி/மத வேறுபாடின்றி எவன் காலிலும் விழ எந்த மத/சாதிக்காரனும் காத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். அதுபோலத்தான் தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் தேவரின தலைவர்களும் தங்களது இடத்தை தக்க வைத்து பணம் பதவி புகழை சம்பாரிக்க ஜெயலலிதா/கருணாநிதி என பலரது காலிலும் விழுந்து கிடக்கின்றனர்.

இதில் இங்கே அடிமையாக இருக்கும் அடிமை அடையாளமான ஓபிஎஸ் பற்றியெல்லாம் யாருக்கும் கவலை இல்லை. வேண்டுமென்றால், தேவர் சாதியை சார்ந்த ஒரு ஆள், தமிழக முதலமைச்சராக இருந்தார் என பின்னாட்களில் சொல்லிக்கொள்ள மட்டுமே உதவும். மத்தப்படி எவன் ஆட்சியில் இருந்தாலும் எவனுக்கும் லாபமில்லை. அவன் என்ன சாதியாக இருந்தாலும்… இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஓபிஎஸ் போன்றோர் தான் ஒட்டுமொத்த தேவரினத்தின் அடையாளமென நினைப்பதும், இந்த சாதியை சேர்ந்தவர்கள் அனைவரும் சாதிவெறியர்கள் என்றும் செம்மறி ஆட்டு மந்தை போன்ற எண்ணத்தை மனதில் இருந்து தகர்த்தெறிய முனையுங்கள். அதை விட்டுவிட்டு, சாதிவெறியன் என்று சொல்லும் ஒவ்வொரு முறையும், சாதி பாகுபாடற்ற மனநிலையில் உள்ள பல தேவர் சாதி தமிழனை, இன்னும் சாதி வெறியனாக மாற்றிக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதே நிதர்சனம்.


- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக