உங்களது அடி முட்டாள்தனமான வாதத்தை ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொள்வோமேயானால், ஆளுமை திறன்மிக்கவரென்று உங்களை சில ஜால்ராக்கள் புகழ்வார்களே, அவர்களது வாக்கு இப்போது பொய்த்து போய்விடுமே. நான், எனது என அடிக்கடி தானென்ற தம்பட்டம் அடிப்பீர்களே, அப்படிப்பட்ட தங்களது கட்டுப்பாட்டில் தானே தமிழக அரசு உள்ளது. உங்களுக்கு தெரியாமல் தமிழ்நாடு மின்சார வாரியம் எப்படி, உங்களுக்கு எதிராக சதி செய்ய முடியும்? ஒருவேளை சதி செய்திருந்தாலும் எந்த யூனிட்டில் சதி நடந்தது என்பது கூடவா உங்களது கவனத்திற்கு வரவில்லை? தமிழ்நாட்டுல மழை வரலைன்னா கூட இனி எதிர்கட்சிகளின் சதியென்று தான் சொல்வீர்கள் போல....
இப்படியாக, தமிழ்நாட்டு பிரச்சனையை கூட சரிவர தீர்க்க முடியாத நீங்கள் வெறுமனே வருங்கால பிரதமர் என்ற பகல்கனவை காணுவது வேடிக்கையாகத்தான் உள்ளது என்பது ஏழை எளிய வாக்கள பெருமக்களின் பேச்சாக இருக்கிறது என்பதை எப்போது உணரப்போகின்றீர்கள்?
மின்வெட்டு நாமம் வாழ்க! பாதாள சாக்கடை நாமம் வாழ்க!
- இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக