29 நவம்பர் 2017

இமலாதித்தவியல்: மதம்!

ஒரு மதத்தை ஏற்பதும், துறப்பதும் அவரவரவர் தனிப்பட்ட உரிமை. மதம் மாறினால் தான் தன்னுடைய காதலையோ - அன்பையோ நிரூபணம் செய்ய முடியுமென்றால், அப்படியொரு மானங்கெட்ட தனத்தை, எந்தவொரு அயோக்கியத்தனமான கடவுள் சொல்லிருந்தாலும் அந்த கடவுளை செருப்பாலேயே அடிக்கலாம். நிச்சயமாக கடவுள் அப்படி சொல்லிருக்க முடியாது; ஏனெனில் கடவுளின் தூதுவனாக காட்டிக்கொண்டவனும், நானே கடவுளென்று சொல்லிக்கொண்டவனும் செய்த திருட்டுத்தனம் தான் இது. மற்றபடி பிறப்பிலேயே அறியப்படும் மதத்திலேயே இருப்பதா? அந்த மதத்தை விட்டு வெளியேறி வேறொரு மதத்தில் இணைவதா? மதமே எனக்கு தேவையில்லையென முற்றிலும் மதமற்றவராக வாழ்வதா? என்பதையெல்லாம் தீர்மானிக்க வேண்டியது தனிப்பட்ட நபர் தானே ஒழிய, எந்தவொரு மத அமைப்புகளும் இதை கட்டுப்படுத்த கூடாது; கட்டுப்படுத்தவும் முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக