12 நவம்பர் 2017

அறம் சிறக்க வாழ்த்துகள்!

அறம் இன்னும் பார்க்கவில்லை; பார்த்தவர்களெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு வரை கோபி நயினார் என்ற ஓர் அறியப்படாத படைப்பாளியான மீஞ்சூர் கோபியை, பலரும் விமர்சித்திருக்கிறார்கள். ’மெட்ராஸ்’ படத்தின் கதையானது, அவருடைய ‘கருப்பர் நகரம்’ என்பதின் கதை தான் என்பதை இப்போது அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். பா.ரஞ்சித்தின் முதற்படமான அட்டைக்கத்தியில் கோபி நயினாரின் பல காட்சிகள் திருடப்பட்டிருந்தன என்பதும், இந்த கோபியின் கதை விவாதத்தில் இருந்தவர் தான் பா.ரஞ்சித் என்பதும் யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதுபோல ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ’கத்தி’ படத்தின் கதையும் இவருடையது தான் என்பது இன்று அறம் உரைத்திருக்கிறது இப்படம். எதிர்மறை விமர்சனங்களால், பல்வேறு தரப்பட்டவர்களாலும் குறிப்பாக அவர் சார்ந்த சமூகத்தை சேர்ந்த பா.ரஞ்சித் போன்றவர்களாலும் விமர்சிக்கப்பட்ட கோபி நயினார், அறம் மூலம் மீண்டெழுந்து வந்திருப்பது பெருமகிழ்ச்சி. இத்தனை தோல்விகளிலும், அவமானங்களிலும் இருந்து மீண்டெழுந்த மீஞ்சூர் கோபி என்ற கோபி நயினாரின் வெற்றியானது போற்றுதலுக்குரியது. இதற்கு காரணமாக இருந்து, இவர் மீது நம்பிக்கை வைத்து படம் உருவாக காரணமாக இருந்த நயன்தாராவுக்கு கோபி நன்றிக்கடன்பட்டவராகிறார். அறம் என்றும் வெல்லும் என்பது இந்த அறம் உணர்த்திருக்கிறது. வாழ்த்துகள்!
(பி.கு: இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள சவுக்கு கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளலாம், https://www.savukkuonline.com/12697/ )
#Aramm


கேரள நயன்தாரா தோழராக தெரிந்த உமக்கு, மீஞ்சூர் கோபி ஏன் குருவாகவோ / அண்ணனாகவோ தெரியல? #ஒன்றுசேர்களவாடுபடமெடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக