முன்பே
கண்டுகளித்த கனவை நோக்கி நகரும் நாடோடிகள் நாம். உறக்கமும் - இறப்பும்
வேறுவேறென்று நம்பிக்கொண்டிருக்கும் அதிமேதாவிகள் நாம். காலம் என்பதை
உண்மையென கருதி நேரத்தை கணக்கிட்டு நாளை நோக்கி காலம் கழிக்கும் ஒவ்வொரு
நொடியும் என்றைக்கோ தீர்மானிக்கப்பட்ட ஒன்று. அதற்கு விதியெனும் பெயரும்
உண்டு. இங்கே எதுவும் புதிதல்ல; எதுவும் பெரிதல்ல. ஒன்றுமே இல்லாத
ஒன்றிலிருந்து உருவாகி, மீண்டும் ஒன்றுமே இல்லாமல் தொலையும் மாயை தானே இந்த
சின்னஞ்சிறு வாழ்க்கை. அதை புரியாதவரையில் இங்குள்ள அனைத்தும் சுமையாகவே
இருக்கும். குறைந்தபட்சம் அதுவரை வாழ பழகிக்கொள்!
- ஸ்ரீ பரமஹம்ச இமலாதித்தனந்தா
- ஸ்ரீ பரமஹம்ச இமலாதித்தனந்தா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக