04 மே 2019

டெல்டா பகுதியை சேர்ந்தோர் கவனத்திற்கு,







குமுதம் ரிப்போர்ட்டர் போன்ற எச்சை ஊடகங்களால் தான் ஒட்டுமொத்த குழப்பங்களும் தொடர்கின்றன. 'அதர்ம யுத்தம்' என்ற தலைப்பில் ருத்ரன் என்ற பெயரில் இரண்டு தொடர்கள் வந்திருக்கின்றன. 26.04.2019, 30.04.2019 என்ற இரு மின்னிதழிலும் யாரைப்பற்றி சொல்கிறேனென சொல்லாமலேயே தரம்தாழ்ந்த வார்த்தைகளால் நாலாந்தர கட்டுரை பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

"தமிழகத்தில் கிரிமினல் தனத்திற்காக நேர்ந்து விடப்பட்ட மண்டலம் டெல்டா மண்டலமாம். டெல்டா பகுதிகளில் கொத்து கொத்தாக கூலிப்படைகள் திரிகின்றார்களாம். ஒருமையில் அவன் இவனென சொல்லப்பட்டிருக்கிறது. எவனுக்கும் அப்பன், ஆத்தா வைத்த பெயர் மட்டும் வழக்கத்தில் இருக்காதாம்." இப்படியாக பல அவதூறுகளை நிரப்பிருக்கிறது அந்த தொடர் கட்டுரை. (ரிப்போர்டர் கட்டுரை லிங் கீழே கமெண்டில் உள்ளது)

மானங்கெட்ட தனமான எழுத்து நடை; காசுக்கு மாரடிக்கும் வன்மம் நிறைந்த வசவுகள்; கூலிப்படையை விட ஊடகத்தை வைத்து வேசித்தனம் செய்யும் வார்த்தை ஜாலங்கள். நீங்களெல்லாம் திருந்தவே வாய்ப்பில்லையா? ரிப்போர்ட்டர், ஜூவி, நக்கீரன் போன்ற மஞ்சள் பத்திரிகைகளை தடை செய்ய வாய்ப்பே இல்லையா? எதிரணியிடம் பணம் வாங்கி அவதூறாக மற்றொரு அணியை எழுதுவது. இன்னொரு பக்கம், மிரட்டி பேரம் பேசி பணம் சம்பாரிப்பது. இவைதான் இம்மாதிரியான ஊடகங்களின் முழுநேர தொழிலாக இருக்கிறது. வலுவான கண்டனக்குரல் எழுப்பி, இம்மாதிரியான கடும்போக்கை தடை செய்வோம்.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக