15 நவம்பர் 2015

பாரீஸ் முதல் கடலூர் வரை!

நாம் எதை ஆதரிக்க வேண்டும்? எதை எதிர்க்க வேண்டும்? எதைப்பற்றி தீவிரமாக யோசிக்க வேண்டும்? எதற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? என்பதை கூட ஊடகங்களே தீர்மானிக்கின்றன என்பதற்கான ஒரு சிறிய உதாரணம் தான், 'சப்போர்ட் பாரீஸ்' என்ற தற்காலிக ப்ரோஃபைல் மாற்றம்.

முள்ளிவாய்க்காலில் பல லட்சம் உயிர்கள் கொலை செய்யபட்ட போது, அது அடுத்த நாட்டு பிரச்சனை. ஆனால், பாரீஸ் மட்டும் பக்கத்து வீட்டு பிரச்சனை. டெல்லி கற்பழிப்புக்காகவும், ஆந்திர வெள்ளத்திற்காகவும் நிதியுதவி - போராட்டம். ஆனால், தமிழகத்தில் கற்பழிக்கப்பட்ட சிறுமிகளோ, கடலூர் மழை வெள்ளத்தால் வீடிழந்த மக்களோ, இலங்கை கடற்படையால் தாக்கப்படும் மீனவர்களோ, வேற்றுகிர வாசிகளாக போய் விடுகின்றனர், புரட்சி பேசும் போராளிகளுக்கு.
த்தூ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக