18 நவம்பர் 2015

அஜித் ரசிகனும், கடலூர் வெள்ளமும்!

ஆமா! அஜித் மட்டும்தான் நல்லவர்; மத்த நடிகரெல்லாம் திருடனுங்க. அஜித் நல்ல நடிகர் என்பதை விட நல்ல மனிதர்; ஆமா! மத்த கூத்தாடிகளெல்லாம் கேடுகெட்டவனுங்க. படத்தை படமாக மட்டும் பார்க்க தவறிய தமிழனின் தலைமைத்துவ துதி இப்படித்தான் இருக்கிறது.
 
தமிழ் சினிமா வரலாற்றில் 'வேதாளம்' மிக அதிக வசூலை பெற்றதாக பட்டியலிட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த பல கோடிகள் வசூலித்த தொகையில் ஒருசில கோடிகளை சென்னை - கடலூர் உள்ளிட்ட பகுதிகளின் மழை வெள்ள பாதிப்புகளுக்காக கொடுத்திருந்தால் பெருமை படலாம். அதை விட்டுவிட்டு, "தலடா, தெறிடா, இத்தனை கோடிடா!" ன்னு மழையால் வீடிழந்த மக்கள் அவதிப்படும் இம்மாதிரியான சூழலில் பீற்றி கொள்வதில் என்ன பெருமை கிடைக்கிறதோ, சில டேஷ்களுக்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக