18 நவம்பர் 2015

நயன்தாராவுக்கு வாழ்த்துகள் சொல்வது சரியா?

தவறு செய்ய வாய்ப்பு கிடைக்காத வரையிலும், அயோக்கியன் கூட மற்றவர்களின் பார்வையில் நல்லவன் தான். அதே மாதிரிதான் நயன்தாரா விசயமும், மற்றவர்கள் பார்வையில் பார்க்க படுகிறது. இன்றைக்கு நயன்தாரா பிறந்தநாள் என்பதால், எதிர்ப்பும் - ஆதரவுமாக, வாழ்த்துகளும் - அவதூறுகளுமென பல பதிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன.
நயன்தாராவை விமர்சிக்கும் எத்தனை பேர், தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் ஒழுக்க சீலராக வாழ்கின்றனர் என்பது அவர்களின் மனசாட்சிக்கே வெளிச்சம். சினிமா என்பது பொது ஊடகம். அதில் நடிப்பர்களை திரையில் ரசிப்பதோடு நிறுத்தி கொள்ளுங்கள். நடிகைகளை வெறும் உடலாக மட்டும் பார்க்காமல், அவர்களது படுக்கையறை திரையை நீக்கி எட்டிப்பார்த்து எச்சில் விட்டு, உங்களது வன்மங்களை வார்த்தைகள் ஆக்காதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக