07 நவம்பர் 2015

கமல் எனும் நாயகன்!

மேற்குலக சினிமாவை காப்பிகேட் செய்யும் காலமெல்லாம் மலையேறி போனதால் தான், உன்னைப்போல் ஒருவன், பாபநாசம் போன்ற இந்திய துணைக்கண்டத்தின் படங்களையும் காப்பி அல்லது இன்ஸ்பியர்ட் பண்ண வேண்டிய சூழல் ஏற்பட்டது. 

"அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே, முருகா! முருகா! முருகா!" ன்னு முதல் படத்திலேயே அப்படி நடித்ததால் தான் 50 வருடங்கள் கழித்தும் இங்கே நீடித்து நிலைத்து நின்று, "கடவுள் இல்லைன்னு சொல்லல; இருந்தால் நல்லாருக்கும்ன்னு தான் சொல்றேன்" ன்னு கைத்தட்டல்களுக்காக போலியாக உரத்த குரலில் கரகரவென பேச முடிகிறது கமலால்!

 பேச்சளவில் மட்டும் பகுத்தறிவு என பேசிக்கொண்டு, தன் படங்களில் வைணவனாகவே கதாப்பாத்திரத்தை உருவாக்கி, ஹேராம், பஞ்ச தந்திரம், ஆளவந்தான், தசாவதாரம், விஸ்வரூபம் என படங்களின் பெயர்களில் கூட தன் மார்க்கமான வைணவத்தை மறவாத, அன்பே பாபநாசம் சிவமென சொன்ன "illuminati"கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்! எம்பெருமான் முருகன் அருளோடு வாழ்க வளமுடன்...

கூடவே, ஸ்ருதிஹாசன் பற்றி கருத்து தெரிவித்தன் விளைவாக, கமல் ரசிகர்களால் தாக்குதலுக்கு உள்ளான சிவகார்த்திகேயனுக்கு இன்றைய நாளில் வீரவணக்கம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக