19 நவம்பர் 2015

ஆளும் வர்க்கத்தின் அரஜாகம் - மருதுபாண்டியர் நினைவுத்தூண் அகற்றம்!



விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஆத்திப்பட்டியில், சுதந்திர போராட்ட வீரர்களும், தமிழ் தமிழ் தேசியம் காத்தவர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் உருவம் பதித்த நினைவுத்தூணை அரசு சார்பில் தரைமட்டமாக அகற்றப்பட்டுள்ளது. தமிழக தலைநகரிலே, நாட்டிற்காக என்ன சாதனை செய்தாரென்றே தெரியாத தெலுங்கர் சோபன்பாபு சிலையெல்லாம் பாதுபாப்பாக இருக்கையில், ஏதோவொரு கிராமத்து மூலையில் பெருந்தமிழர்களான மருது சகோதர்களின் நினைவுத்தூணை அகற்றுவதுதான் நாடு போற்றும் நான்காண்டு சாதனை போல.
ஆளும் வர்க்கத்தின் அராஜக போக்கான இச்செயலை, அனைத்து தமிழ் உறவுகளும் நிச்சயம் கண்டிப்பார்களென நம்புகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

1 கருத்து:

  1. கண்டிக்கிறேன் ,ஏன் அகற்ற வேண்டும் , காரணம் என்ன,அங்குள்ள தேவரினம் ஏன் அனுமதித்தது

    பதிலளிநீக்கு