24 அக்டோபர் 2015

மருது பாண்டியர் நினைவேந்தல்!

உலக வரலாற்றில் சாதி மத வேறுபாடின்றி 500க்கும் மேற்பட்டோரை தங்களது மன்னனுக்காக தூக்கிலிடப்பட்ட ரத்த சரித்திரம் 1801ம் ஆண்டு அக்டோபர் 24...

‪#‎மருதுபாண்டியர்‬

தமிழ் மண்ணில் அரசாண்ட அனைத்து சிற்றரசர்களையும் சாதி மத வேற்றுமையின்றி தமிழ் இனக்குழுக்களையெல்லாம் ஐரோப்பிய வல்லாதிக்கத்திற்கு எதிராக, "வீரசங்கம்"என்ற பேரமைப்பு மூலம் ஒன்றிணைத்த மாமன்னர் மருதுபாண்டியர்கள், தமிழ்தேசியத்தின் முன்னோடி!

‪#‎மருதுபாண்டியர்‬

உலகிலேயே முதன் முறையாக ஐரோப்பிய ஈனர்களுக்கு எதிராக, திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கம் கோவில் வாசலிலும் "ஜம்புத்தீவு" போர் பிரகடனத்தை அறிவித்த முதல் சுதந்திர போரின் மாவீர்களின் வீரம் விதைக்கப்பட்ட நாள் இன்று.

‪#‎மருதுபாண்டியர்‬

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னோடியாக, "கொரில்லா போர்யுக்தி முறை"யை கையாண்டு வெற்றி கண்ட மாமன்னர்களின் மரணம் முத்தமிட்ட நாள், அக்டோபர் 24.

‪#‎மருதுபாண்டியர்‬

சிவகங்கை சமஸ்தானத்தை 1780 முதல் 1801 வரை ஆட்சி செலுத்தி தமிழ்தேசிய மாமன்னர்களான வெள்ளை மருது - சின்ன மருது இரு மருதரசர்களையும் சூழ்ச்சியின் வலைபின்னி கரடி கருத்தான் மூலமாக துரோகிகளால் காட்டிக்கொடுத்து வரலாற்றில் துயரம் விளைவித்த நாள் இன்று. அக்டோபர் 24...

‪#‎மருதுபாண்டியர்‬

அக்டோபர் 24, கி.பி.1801...
மாமன்னர் மருதுபாண்டியர்களால் எடுப்பித்த காளையார்கோவில் கோபுரங்கள் தகர்க்கப்படுமென்ற ஐரோப்பியர்களின் தந்திரத்தை முறியடித்த ஆன்மீகப்பற்றாளர்களான தீவிர முருக-சிவ பக்தர்களான மருதீசர்களின் 214 வது நினைவேந்தல் இன்று.

‪#‎மருதுபாண்டியர்‬

மறக்க முடியுமா?
மாமன்னர் மருதுபாண்டியர்களை!
அடக்க முடியுமா?
அரசாண்ட அகமுடையார்களை!
அக்டோபர் 24 - அரசு விழா, திருப்பத்தூர்.
அக்டோபர் 27 - அரசியல் விழா, காளையார்கோவில்.

‪#‎மருதுபாண்டியர்‬

தங்கள் மன்னனுக்காக தங்களது உயிரை துச்சமென நினைத்து, சாதி மத வேறுபாடின்றி தங்கள் உயிரை கொடுத்த 500க்கும் மேற்பட்ட தமிழர்களின் வீரமும் ஈரமும் உலகிலேயே இதுவரை நடந்ததில்லை; நடக்க போவதுமில்லை.
அது, கி.பி.1780 முதல் கி.பி.1801 வரையிலான மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆட்சிக்காலம்.

‪#‎மருதுபாண்டியர்‬





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக