07 அக்டோபர் 2015

மன்னர் பரம்பரையென்ற மாயைக்குள் தமிழ் சாதிகள்!

தன்னை பெற்றெடுத்த தாய் தகப்பனை பெற்றெடுத்த தாய் வழி பாட்டன் உறவை கூட முழுமையாக தெரிந்து வைத்து கொள்ளாத சமூகத்திடம் வரலாறு பற்றிய அறிவை எதிர்பார்ப்பது கடினமான விசயம்.
குறிப்பிடதக்க சில சாதிகளை சார்ந்தவனோ, குறிப்பிட்ட சில பட்ட பெயர்களை உடையவனோ ஒருசில பகுதிகளை உள்ளடக்கிய சிற்றரசை ஆண்ட மன்னனாக இருந்திருக்கலாம். ஆனால், அதே சாதியில் வறுமையில் வாடியவர்கள், அந்த மன்னனின் ஆட்சிக்காலத்திலேயே வாழ்ந்திருக்க கூடும். இன்றைய காலக்கட்டத்தில், ஒரே பட்டமானது ஏழெட்டு சாதிகளுக்கு மேலாக இருப்பதை பார்க்கிறோம்.
கேட்டால் மன்னர் பரம்பரை, மயிரு பரம்பரைன்னு உளற ஆரம்பிச்சிடுவாய்ங்க... முடிந்தால், சொந்த சாதி சனத்துக்கு, இரத்த சொந்தங்களான பங்காளி குடும்பத்தில் கஷ்டத்தில் வாழ்க்கை நடத்தும் யாருக்காவது பொருளாதார உதவி செய்து மேலோக்கி வளர தோள் கொடுக்க முன் வரணும். அதெல்லாம் விட்டுட்டு, ஆண்ட பரம்பரைன்னு வெற்று கூச்சல் எதுக்கு? எவனாக இருந்தாலும், பிசி, எம்பிசி, எஸ்சின்னு எதாவதொரு கோட்டாவுல தானே அரசாங்கத்திடம் கையேந்தி வாழ்க்கையை நடத்துறீங்க. அப்பறம் என்ன டேஷ்க்கு அரச பரம்பரையென்ற அலப்பறையெல்லாம்... த்தூ.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக