30 அக்டோபர் 2015

முக்குலத்தோர் அரசியல் பேசும் இளைஞர்களே!

முக்குலத்தோர் அரசியல் பேசும் இளைஞர்களே!

பசும்பொன் தேவரை மட்டும் தலைவனாக ஏற்றுக்கொள்ளுங்கள். அவர் வழிகாட்டிய, ஆன்மீக தலைவராக விவேகானந்தரையும், அரசியல் தலைவராக நேதாஜியையும் ஏற்று கொள்ளுங்கள். மற்ற யாரும் உங்களுக்கு தலைவனாக இருக்க முடியாது. அக்டோபர் மாதம் மட்டும் உயிர்த்தெழும் சாதிக்காரனையெல்லாம் தலைவனென நினைக்காதீர்கள். அந்த மாதிரியான நபர்களையெல்லாம் உறவுக்காரனாகவோ, சாதிக்காரனவோ பாருங்கள், தயவு செய்து தலைவனென சொல்லாதீர்கள். அரசியல் கட்சிகளிடம் ஒன்றிரண்டு சட்டமன்ற தொகுதிகளை யாசகம் கேட்பவன் தலைவனில்லை.
இசுலாம் மார்க்கத்தில் இறைவன் ஒருவனே; ஆனால் இறைத்தூதர்கள் இருப்பது போல, தலைவன் ஒருவனாக பாவியுங்கள். சொந்த பலத்தோடு ஒரு தொகுதியில் சுயேட்சையாக தனித்து நின்று வெற்றி பெற வக்கிலாதவர்களின் பின்னால், மாநில - மாவட்ட - ஒன்றிய பதவிக்காக தயவு செய்து விலை போகாதீர்கள்.

 "அரசியலிலும், ஆன்மீகத்திலும் சாதி பார்க்க கூடாது" என்று சொன்ன பசும்பொன் தேவரையே, சாதி தலைவனாக்கிய பெருமை முழுக்க முழுக்க சாதி அமைப்புகளையே சாரும். "தேசியம் எனது உடல். தெய்வீகம் எனது உயிர்!" என்ற தன் சொல்லுக்கேற்ப வாழ்ந்துகாட்டிய பசும்பொன் தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக