26 அக்டோபர் 2018

மாமன்னர் மருதுபான்டியர்கள் யாருக்கு சொந்தம்?



மாமன்னர் மருதுபாண்டியர்கள் குறிப்பிட்ட இனக்குழுவிற்கு மட்டும் உரிமையானவர்கள் இல்லை; ஒட்டுமொத்த தமிழினத்திற்கே அடையாளமானவர்கள்; இது உண்மை தான்; ஆனால் இத்தனை நாட்கள், அகமுடையார்கள் கொண்டாடவில்லையென்றால், என்றைக்கோ மருதரசர் புகழை, கரடி கருத்தான் போன்ற காட்டிக்கொடுத்த துரோகிகளின் வம்சாவழியினரால் இருட்டடிப்பு செய்திருப்பார்கள். சிவகங்கை சீமை ஆட்சிப்பட்டியல் கல்வெட்டில் கூட, எம் மன்னவர்களின் பெயர்களை இடம்பெற செய்யாத அளவிற்கான அவலநிலையே இன்றளவும் தொடர்கிறது; இந்த அநியாயத்தை அகமுடையார்களை தவிர வேறு யாராவது கண்டித்தது உண்டா?
கொலை காரனுக்கும், கொள்ளை காரனுக்கும், தொடை நடுங்கிக்குமென கண்டவனக்கெல்லாம் தமிழ்நாடெங்கும் சிலை இருக்க, மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு மதுரையை தவிர வேறெங்கும் முழு உருவ சிலைகள் உண்டா? 1780 முதல் 1801 வரை சிவகங்கையை ஆண்ட மருதுபாண்டியர்களின் சிலையை, இன்றளவும் கூட அங்கே வைக்க முடியாத அளவிற்கு துரோகம் உச்சத்தில் இருக்கிறது. இதுதான் கள எதார்த்தம். சாதியம் தாண்டி தமிழ் தேசியத்தை, மண்ணுரிமை மீட்பை, மக்கள் புரட்சியை எமக்குள் விதைத்து சென்ற ஆண்டவர்கள் அவர்கள்; எங்கள் வணக்கத்திற்கும் போற்றுதலுக்கும் உரிய அவர்களை, ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் கொண்டாட முன்வரும்போது நாங்கள் அவர்கள் பின்னால் நிற்போம். அதுவரை நாங்கள் முன்னெடுக்கும் எங்கள் கொண்டாட்டங்களை கொச்சைப்படுத்தாதீர்கள்.
- இரா.ச. இமலாதித்தன்
#மருதுபாண்டியர் #MarudhuPandiyar #அகமுடையார் #Agamudayar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக