25 மார்ச் 2015

உலகில் மதம் எனும் அரக்கன்!

கொள்ளையடிப்பதற்காக நாடு கடந்து போர் புரியும் இடத்தில், தங்களது மார்க்கத்தை ஏற்காதவர்களை கொலை செய்து, பெண்களை கற்பழித்து தன் கருவை வளர செய்தது ஒரு கூட்டம். ஒருபடி மேலாக, இன்னொரு மதவெறி கூட்டம், நாடு விட்டு நாடு வந்து வியாபாரம் செய்து ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற அங்குள்ள மக்களிடம் தன் மதத்தையும், மொழியையும் அன்பெனும் ஆயுதம் கொண்டு நாகரீகம் என்ற பெயரில் திணித்தது. அந்த மண்ணின் மைந்தர்களின் வீரத்தையும், அறிவையும் கண்டஞ்சி பூர்வகுடிகளின் வம்சாவழிகளையே கொத்து கொத்தாக நயவஞ்சகத்துடன் இனவழிப்பு செய்தது. இன்றைக்கு உலகளாவிய பிரச்சனைக்கு இந்த இரண்டு மதங்களும் காரணமாக இருந்த போதும், இரண்டாவதாக சொல்லப்பட்ட மதமே எல்லாவற்றுக்கும் ஊன்றுகோலாக இருந்து உலகையே ஆட்டிவிக்கிறது. இந்த மாதிரி அடிக்கிற ஆடி காத்தில், சாதியற்ற ஆதிகுடியான அனைத்து தமிழனும் பாவம் தான்.

1 கருத்து:

  1. சமணனாக இருந்து, பின் சைவ மார்க்கத்துக்கு மாறி நூற்றுக்கணக்கான சமணர்களை கொன்ற பாண்டியனை பற்றி படித்ததில்லையோ? அனைத்து மதங்களிலும் இவை நடந்திருக்கின்றன. உலகளாவிய பிரச்சனை என்றால் என்ன? உலகளாவிய பிரச்சனைக்கு மதம் என்ன செய்யும்? உலகில் கிறித்தவர்கள்தான் அதிகம், அதற்கு அவர்கள் வாழும் பகுதிகளில் என்ன பிரச்சனை வந்தாலும் மதம்தான் காரணமா? இந்துக்கள் இருப்பதால் இந்தியா மாபெரும் அமைதிப் பூங்காவோ?

    பதிலளிநீக்கு