08 மார்ச் 2015

மகளிர் தினம்!

மகளிர் தினமென்று தனியாக வருடத்திற்கு ஒரு நாளை ஒதுக்க வேண்டிய அவசியமே இங்கு தேவையில்லை. ஏற்கனவே மண்ணிலிருந்து ஆறு தொடங்கி நாடு முதல் மொழி வரைக்கும் பெண்ணாகவே பார்த்து பழக்கப்பட்ட சமூகம் இது. அதனால் பெண்களை தனிமைப்படுத்தி தனித்துவமாய் அடையாளப்படுத்த வேண்டிய அவசியமே தேவையில்லை. மார்ச் 7 முதல் மார்ச் 9 வரை தற்காலிக பெண்ணியவாதிகளாக மாறப்போகும் அனைத்து ஆண்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அதற்கு முன்பாக, வீட்டுக்குள் பெண்ணிடம் அடங்கி அடிமைப்பட்டு கிடப்பதிலிருந்து வெளியே வர முயற்சி செய்யவும் வாழ்த்துகள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக