26 மார்ச் 2015

உலக கோப்பை துளிகள்!

-001-

உலக கோப்பைல இந்திய அணி தோற்று போனது கூட கஷ்டமா இல்ல. அதை மத ரீதியாக தங்களின் வெற்றின்னு நினைக்கிற, பாஸ்போர்ட்ல இந்தியன்னு சொல்லிக்கிட்டு வெளிநாட்டுல ஒட்டகம் மேய்ச்சிக்கிட்டு இருக்கிறதுங்கள நினைச்சாதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு.


-002-

தோனி ஆஸ்திரேலியாவிட்டு இந்தியாவுக்கு திரும்பி வரும்போது, ஒருபய கூட தோனியை மறந்தும் புகழ்ந்துட கூடாதுன்னு, நம்ம கோஹ்லி முத்தரப்பு தொடர் ஆரம்பிக்கிறத்துக்கு முன்னாடியே மூனு விசயத்தை முடிவு பண்ணி வச்சிருந்தாப்ள. அதுல ரெண்டாவதா தோனி கதையும் ஓகே ஆய்டுச்சு. அல்ரெடி அனுஷ்கா ஷர்மாவும் ஓகே. இப்போ மிச்சம் இருக்கிறது, மூனாவதா கேப்டன் பதவி மட்டும் தான். அதுவும் ஐபிஎல் முடிஞ்ச உடனே அறிவிப்பு வந்துடும். ஓர் அமாவாசை, இனி நாகராஜ சோழனாகிறான்! வாழ்த்துகள்டே... "என்னுடைய சாதனைகளை இன்னொரு இந்தியனே முறியடிக்க ஆசைப்படுறேன்"னு சொன்ன நம்ம சச்சினின் வாக்கை காப்பாற்றக்கூடிய தகுதியுள்ள கோஹ்லி, இனியாவது பிசிசிஐ டீமுக்காக ஆடுவாப்ள நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை! 

-003-

ஒரேவொரு ரன் அடிக்க பதிமூனு பாலை வேஸ்ட் ஆக்கினதை விட, அந்த ஒரு ரன் அடிக்கிற லட்சணத்த பார்க்கிறதுக்காக இங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்கே பறந்து போன அனுஷ்கா ஷர்மாவை நெனைச்சு தான் துக்கப்படுறேன், துயரப்படுறேன், வெட்கப்படுறேன், வேதனைப்படுறேன், இன்னும் என்னன்னமோ படுறேன்.

-004-

முதலமைச்சர் பதவியை இழந்த பிறகும், 'மக்கள் முதல்வர்'ன்னு வெட்கமில்லாமல் போட்டு கொள்வதை போல, இனி இந்திய கிரிக்கெட் அணியும், 'மக்கள் உலக கோப்பை சாம்பியன்'னு வெட்கமே இல்லாமல் போட்டு கொண்டாலும் தப்பில்லைன்னு தான் தோணுது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக