25 மார்ச் 2015

தமிழக பட்ஜெட்டும் டாஸ்மாக் தமிழனும்!

நட்ட இடத்திலேயே வருடாவருடம் மரக்கன்றுகளை நடும் சமூக ஆர்வலர்கள் போல, வீழ்ச்சியடைந்த பொருளாதரத்திற்கு நடுவே பட்ஜெட் என்ற பெயரில் வருடாவருடம் அறிவிப்புகள் மட்டும் வந்து கொண்டே இருக்கின்றன ஆளும் அரசியல்வாதிகளால். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை 500 ரூபாய் போதும் இந்த இளிச்சவாய வாக்களனுக்கு. எவன் குடி கெட்டால் இவனுக்கு என்ன? சாயுங்காலமானால் மூச்சு முட்ட குடிக்க டாஸ்மாக் வாசலில் தவமிருக்க தான் நேரம் சரியா இருக்கே தவிர, மற்ற சிந்தனையே இவனுக்கு வருவதில்லை. அப்படியொரு சிந்தனையை மழுங்கடிப்பதற்காகவே, டாஸ்மாக் கடைகளை ஊருக்கு ஊரு திறந்து வச்சுருக்கு ஆளும் அரசாங்கம். இந்த சாராயக்கடை வருமானத்தை நம்பித்தானே அரசாங்க பட்ஜெட்டே வருடாவருடம் போடுறாங்க. இவங்க பட்ஜெட்டோ, திட்டமோ எதை போட்டாலும், அது அப்பாவி மக்களின் சோற்றின் மீதுதான் மண்ணை அள்ளி போடுவதாக இருக்கிறது; இதுதான் எதார்த்தம். இங்க பணக்காரன் பணக்காரனாகவே வளருறான். ஏழை பரம ஏழையாகவே தேயுறான். ஆனால், இந்த நடுதரவர்க்கம் தான் நாசமா போய்கிட்டு இருக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக