27 ஏப்ரல் 2016

இந்த வார அரசியல்!

வைகோ மாதிரி தேர்தலில் நிற்காமல் ஒதுங்கி கொண்டாலே, பொய்யான மாயையை இந்த தேர்தலுக்கு பிறகும் கொஞ்ச காலம் சிலர் தக்க வைத்து கொள்ள முடியும்!

#

ஓரிரு நாட்களில் அதிமுகவில் மேலும் சில வேட்பாளர் மாற்றம் வரவும் வாய்ப்பிருக்கிறது.

#

கடைசி வரைக்கும் ஜெயலலிதாவின் வாசற்கதவு திறக்கப்படுமாயென காத்திருந்த கதையெல்லாம் இன்றைக்கு மறந்து போய் விடுமா என்ன? தேர்தல் முடிந்த பின்னால் ஓட்டுகளின் எண்ணிக்கை சொல்லிவிடும், சிலரது பல(வீன)த்தை!

காத்திருக்கிறேன்...

#

ஒருவேளை திருவாடானை தொகுதியில் கருணாஸ் வெற்றி பெற்றால், 'எங்கள் ஓட்டுகளால் தான் அவர் வெற்றி பெற்றார். எங்களிடம் கை கால்களில் விழுந்து கெஞ்சியதால் ஓட்டு போட்டோம்'ன்னு சொல்வாய்ங்க. மாறாக, கருணாஸ் தோற்றுவிட்டால், 'எங்களுக்கு சீட் கொடுக்காத தொகுதியில் அகமுடையானை ஜெயிக்க வைத்துவிடுவோமா?!'ன்னும் சொல்வாய்ங்க.
போலியான சாதி அமைப்புகளின் உண்மை தன்மையை, நிச்சயமாக கருணாஸ் இந்த தேர்தலுக்கு பிறகு புரிந்து கொள்வார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக