20 ஏப்ரல் 2016

ஜெயலலிதா பார்வையில் தமிழர்கள்!



சிங்கள இராணுவத்தால் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்து கொண்டிருந்த போது, "போர் என்றால் மக்கள் இறக்கத்தான் செய்வார்கள்" என கூறிய ஜெயலலிதாவிடம், உங்கள் தேர்தல் பரப்புரையை பார்க்க வந்த நான்கு பேர் வெவ்வேறு இடங்களில் இறந்துள்ளனரே?! என கேள்வி கேட்பதே வீண் வேலை தான். ஒருவேளை இதையே விமர்சனமாக சொல்லி கேள்வி கேட்டாலும் பதில் இப்படியாகத்தான் இருக்கும்.

"வெயிலின் தாக்கத்தால் அண்டை மாநிலங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்; ஆனால் நான் தலைமை வகிக்க என் தலைமையிலான ஆட்சியில் இதுவரை நான்கு பேர்தான் இறந்துள்ளனர். எனவே, இந்த பொற்கால ஆட்சி தொடர, நான் ஹெலிகாப்டரில் பறந்து வந்து, உங்கள் சகோதரியாய் மேடையில் பத்துக்கும் மேற்பட்ட ஏசிக்களின் உதவியுடன் தனியாளாய் அமர்ந்திருந்து, உங்களையெல்லாம் கொளுத்தும் வெயிலில் அமர வைத்தாலும், உயிரிழப்பு குறைவாகத்தான் இருக்குமென ஆண்டவன் மீது ஆணையிட்டு சொல்கிறேன். ஏனெனில் நான் சொன்னதையும் செய்வேன்; சொல்லாததையும் செய்வேன் என்பதை நீங்கள் சென்னை வெள்ளத்தின் போதே நன்றாகவே அறிந்திருப்பீர்கள்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக