06 ஏப்ரல் 2016

முக்குலத்தோர் என்ற போர்வையில் வீழும் அகமுடையார்!

அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளை கள ஆய்வு செய்தபின்னால், 60 தொகுதிகளில் தனிப்பெரும்பான்மையாக அகமுடையார் இருப்பதாக உறுதி செய்யப்பட்டது. இதைத்தவிர 234 தொகுதிகளில், வெற்றியை நிர்ணயம் செய்யும் இடங்களில் 40 தொகுதிகளில் அகமுடையார் ஒட்டு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது.

அகமுடையார் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகளையெல்லாம் 'முக்குலத்தோர் / தேவரினம்' அதிகமுள்ள தொகுதியென சொல்லிக்கொண்டு, தங்களது சாதி தொகுதிகளை மட்டும் 'கள்ளர், மறவர்' அதிகமுள்ள தொகுதிகளென சொல்லிக்கொள்ளும் ஈனப்புத்தியை என்னவென்று சொல்வது? அப்படியெனில் கள்ளர் - மறவர்களின் நோக்கம், அகமுடையார் என்ற பெயர் கூட வெளியே வரக்கூடாது என்பதுதானா?

இருகுலத்தோரின் அஜென்டா இதுதான்...

கள்ளர் - மறவர்கள் மைனாரிட்டியாக இருந்தாலும் கூட ஒரே இடத்தில் குழுமி வாழ்வதால் பெரும்பான்மை போல ஒரு மாயையை உருவாக்கி கொள்வது; அடுத்து, உண்மையாகவே பெரும்பான்மையாக உள்ள அகமுடையார்கள் தமிழகமெங்கும் பரவலாக வாழ்வதால் அவர்கள் முதுகில் முக்குலத்தோர் என சவாரி செய்வது. அதற்காகவே அக்டோபர் 30ம் தேதியை பயன்படுத்தி கொள்வது. கடைசி வரையிலும், அரசியல் அதிகாரத்தை அகமுடையார்களுக்கு கிடைக்கவிடாமல், இருகுலத்தோரும் ஏகபோகமாய் அனுபவிப்பது.

இப்படிப்பட்ட உயரிய நோக்கங்களோடு, அகமுடையார் முதுகிலேயே பல வருடங்களாக பயணித்து பழக்கப்பட்ட இருகுலத்தோரின் பயணம், என்றாவது ஒருநாள் முடிவுக்கு வரும். அன்று அகமுடையாருக்கான அரசியல் அங்கீகாரம் கிடைக்கக்கூடும்.

வாழ்க அகமுடையார் ஒற்றுமை!

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக