08 ஏப்ரல் 2016

முக்குலத்தோர் அரசியல்!

இத்தனை வருடங்களாக அதிமுகவை முக்குலத்தோர் கட்சி, தேவர் கட்சியென சொல்லிக்கிட்டே இருந்ததன் விளைவு, கருணாஸ் தவிர வேறெந்த முக்குலத்தோர் அமைப்புகளுக்கும் இதுவரையிலும் அதிமுக கூட்டணியில் ஒரு இடம் கூட ஒதுக்கப்படவில்லை.

தொடர்ச்சியாக கூட்டணியில் இருந்த எந்த முக்குலத்தோர் கட்சிக்கும் அதிமுக கூட்டணியில் இடமில்லை என்பதற்கான மூலக்காரணமே, அதிமுகவிற்கு முக்குலத்தோர் கட்சியென்ற பிம்பத்தை உருவாக்கியதனால் தான் என்பதை இதுவரை யாரும் புரிந்து கொள்ளவில்லை.

மேலும், ஜெயலலிதாவின் பார்வையில், முக்குலத்தோர் அனைவருமே நம் பக்கம் இருக்கையில், தனியாக ஏன் சாதி அமைப்புகளுக்கு இடம் தர வேண்டுமென்று கூட நினைத்திருக்கலாம். அதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், அதிமுக எங்க அமைப்போட தலைவரை அவமதித்து விட்டதென சொல்லவதையெல்லாம் ஜெயலலிதா கண்டுகொள்ளவே போவதில்லை. எனவே, இருக்கின்ற சில நாட்களிலாவது நல்லதொரு முடிவை எடுத்து வெற்றிவாய்ப்புள்ள கூட்டணியோடு தேர்தலை சந்திப்பதுதான் விவேகமென முக்குலத்தோர் அமைப்பின் தலைவர்கள் இனியாவது புரிந்து கொள்வார்களா?!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக