11 ஏப்ரல் 2016

மாமன்னர்களின் சிலை சேதம்!

மதுரை திருமங்கலம் அருகேயுள்ள மருதுபாண்டியர்களின் சிலையை உடைத்தவர்கள், நிச்சயமாக முக்குலத்தோருக்கு எதிரான மாற்று சாதிக்காரர்கள் இல்லை. அது முக்குலத்தோர் என அரசியல் செய்யும் ஈனபுத்தி கொண்ட துரோகிகளால் தான் மருதுபாண்டியர்களின் சிலை உடைக்கப்பட்டுள்ளதாகவே உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வந்துள்ளது.

அகமுடையார்கள் தனித்த அடையாளத்தோடு முக்குலத்தோர் என்ற போலி அரசியல் கட்டமைப்பை விட்டு வெளியேறுவதால், அது முக்குலத்தோர் என அரசியல் செய்பவர்களுக்கு பெருத்த அடியாக இருப்பதால் தான் இம்மாதிரியான கேவலமானதொரு செயலில் இவர்கள் இறங்கிருக்கிறார்கள்.
என்னமாதிரியான கீழ்த்தரமான செயல்களில் இறங்கினாலும், முக்குலத்தோர் என அரசியல் செய்யும் துரோகிகளினால் அகமுடையார் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது; இதன் மூலம், மென்மேலும் அகமுடையார்களின் ஒற்றுமை பலமடையத்தான் செய்யும் என்பதை இனி துரோகிகள் புரிந்து கொள்வார்கள்.


 இந்திய போராட்டத்தின் விடிவெள்ளியாக, உலகிலேயே முதன்முறையாக வெள்ளையனுக்கு எதிராக திருச்சி - திருவரங்கத்தில் 'ஜம்புதீவு' போர் பிரகடனத்தை வெளியிட்டு, 'வீரசங்கம்' என்ற தமிழ்தேசிய கூட்டமைப்பை அன்றைக்கே உருவாக்கிய மாமன்னர் மருது பாண்டியர்களை, வெறும் சமுதாய தலைவர்கள் என திரித்து பிரசுரித்த 'தமிழ் முரசு' பத்திரிகை மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கண்டன போஸ்டர்!



மருதுபாண்டியர் சிலைகளை சேதப்படுத்திய இழிபிறவிகளை ஒரு வார்த்தை கூட கண்டிக்க வக்கில்லாமல், 'அகமுடையார்களை பிரிக்கிறானுங்க'ன்னு புலம்பும் போதே இவர்கள் நோக்கம் எதுவென பலருக்கும் புரிந்திருக்கும்.


மருதுபாண்டியரின் சிலையை உடைத்து விட்டு, அந்த பழியை பட்டியல்சாதி மக்கள் மீது போடலாமென நினைத்த தப்பு கணக்கு பலிக்கவில்லை!


மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலையை உடைத்த, முக்குலத்து துரோகிகளை கைது செய்!


மாமன்னர் மருது பாண்டியர்கள் சிலையை உடைத்த கள்வர்களை கைது செய்!
இதை விட வெளிப்படையாக கண்டிக்க முடியாது. இனியும் அந்த கள்வர்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் முக்குலத்தோர் என சொல்லிக்கொண்டு இருந்தீர்களேயானால் துரோகத்தால் அகமுடையார்கள் வீழ்த்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. துரோகிகளின் கூட்டமைப்பான முக்குலதோர் என்ற போலி அரசியல் கட்டமைப்பில் இருந்து வெளியேறி, அகமுடையார்களாக ஒன்றிணைவோம்!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக