எதார்த்தம்
என்னவென்பதை நாம் புரிந்து கொள்ளாதவரை அடுத்தக்கட்டத்தை நோக்கி நாம் நகரவே
முடியாது. கூட்டமாக இருக்கும் போது, எல்லாமும் நமக்கு சாதகமானது போலத்தான்
தெரியும். தனித்து நின்று சுயத்தை உணரும்போதுதான், நம்முடைய பலவீனமும் -
பலமும் தெரியும். அந்த நிதர்சனத்தை உணரும் தருவாயில், நாம் பல வாய்ப்புகளை
நழுவ விட்டிருப்போம் என்பதும் புரியவரும். எதுவாகினும் தனி மனித
முன்னேற்றமில்லாமல், சமுதாய முன்னேற்றமடைய வாய்ப்பே இல்லை. எனவே, கடந்தகால
மாயையிலேயே நிகழ்காலத்திலும் வாழாமல், எதிர்காலத்தை பற்றிய விழிப்புணர்வும்
நமக்கு வேண்டும். அப்போதுதான், அடுத்த தலைமுறையும், நம்மை நினைத்து
கொஞ்சமாவது பெருமிதப்படும். எனவே, முதலில் நீ முன்னேறு; அதன் பிறகு
ஒட்டுமொத்த சமுதாயத்தையே முன்னேற்றலாம்.
- இமலாதித்தவியல்
- இமலாதித்தவியல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக