05 பிப்ரவரி 2014

ஈ.எஸ்.பி யென்ற ஆழ்மன சக்தி!

எனக்கு புத்தகம் படிக்கும் பழக்கமெல்லாம் கிடையாது. நான் முழுசா படித்த ஒரே புத்தகம்ன்னா, அது கவிப்பேரரசு எழுதின 'கள்ளிக்காட்டு இதிகாசம்' மட்டும்தான். அந்த புத்தகமும் நான் வாங்கல. 2009ம் ஆண்டு 'தமிழ்நண்பர்கள்' யென்ற கூகிள் இணைய குழுமத்தில் நடந்த கவிதைப்போட்டியில் வென்றதற்காக போஸ்டலில் அனுப்பி வச்சாய்ங்க. அதுனாலதான் அந்த புத்தகத்தையும் படிச்சேன். 'பாய்ஸ்' படத்துல, நான் கடைசியா பார்த்த ஹாலிவுட் படம் சோலைங்க... ன்னு பரத்கிட்ட இன்னொருத்தன் சொல்ற வசனம் மாதிரி, எனக்கும் படிச்ச புத்தகமுன்னு பட்டியல் போடவும் ஒன்னுமில்ல. ஏன்னா, எனக்கு படிக்கிற பழக்கமே இல்ல.

புத்தகங்கள் நிறைய படிக்கணும்ன்னு ரொம்ப ஆசையுண்டு. ஆனால், சோம்பேறித்தனத்தால் அதை செயல்படுத்த முடியல. இப்போ ரொம்ப வருசங்கள் கழிச்சு, 'என்.தம்மண்ண செட்டியார்' எழுதின 'உங்கள் ஈ.எஸ்.பி. ஆற்றல்களை பெருக்கி கொள்ளுங்கள்' யென்ற புத்தகத்தை காசு கொடுத்து வாங்கி படிக்க ஆரம்பித்திருக்கிறேன். 160 பக்கங்கள் கொண்ட அந்த புத்தகத்தில், இந்த ஒரு வாரத்துல வெறும் 48 பக்கம்தான் படிச்சு முடிச்சிருக்கேன்.

ஈ.எஸ்.பி. என்பது Extra Sensory Perception யென்ற வார்த்தையின் சுருக்கம் தான். இந்த ஈ.எஸ்.பி ஆற்றல் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஓர் அற்புத சக்தி. பின்னாட்களில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் முன்கூட்டியே காட்சியாக தோன்றி நமக்கு சொல்லிவிடும். கூகிள் உதவியோடும் ஈ.எஸ்.பி பற்றிய அற்புத தகவல்களை தெரிந்து கொள்ளலாம். இந்த ஈ.எஸ்.பி சக்தியை மையப்படுத்தியே, இளையதளபதி விஜயின், 'அழகிய தமிழ்மகன்' படமும் உருவாக்கப்பட்டது. இந்த ஈ.எஸ்.பி. ஆனது எனக்கும் 17 வயது முதல் தொடர்வதால், அதை எப்படி அதிகபடுத்துவது என்ற அதீத ஆர்வத்தோடுதான் இந்த புத்தகத்தை தேடிப்பிடித்து வாங்கினேன். ஆனால், ஆர்வமுள்ள விசயத்தை அறிந்துகொள்ள கூட நேரம் அதிகமாக எடுத்துக்கொள்கிறேன். ஏன்னா, எனக்கு புத்தகம் படிக்கிற பழக்கமெல்லாம் கிடையாது.

முதல்வரியையே கடைசி வரியா கொண்டுவந்து முடிச்சாச்சு! ;)

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக