பேரறிவாளன்,
முருகன், சாந்தன் உள்ளிட மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து இன்று
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை பெரும்பாலானோர்
ஏற்றுக்கொண்டாலும், "தாமதமாக வழங்கப்படும் எந்தவொரு தீர்ப்பும்,
மறுக்கப்பட்ட நீதிக்கு சமமானதே!"; இந்நாட்டில் பல உயிர்களை கொலை செயதவன்,
பல லட்சம் கோடிகளை கொள்ளை அடித்தவனெல்லாம் ஊருக்குள்ள வெள்ளையும்
சொள்ளையுமா திரியும் போது, அந்த மாதிரியான நபர்களை தண்டிக்கக்கூட இந்த
நீதித்துறைக்கு வக்கில்லாமல் போய்விட்டது என்பது வேதனையான விசயமே.
ஏனென்றால், நீதித்துறைக்குள்ளும் அரசியல்தான் களம்காண்கிறது. நீதியரசராக
யார் பணியில் அமரவேண்டுமென்பதை கூட ஆளும்வர்க்கம் நிர்ணயிக்கும் போது
நீதியிலும் பாரபட்சம் இருக்கத்தான் செய்யும் என்பது எதார்த்தம். எது
எப்படியோ, வெறும் பெட்டரி வைத்திருந்த குற்றத்திற்காக இத்தனை வருடங்கள்
சிறையில் அவதிப்பட்டு, இன்றைக்கோ நாளைக்கோ கொல்லப்படலாம் என்ற மனஉளைச்சலோடே
இத்தனை வருடங்கள் சிறைக்குள் காலம் கழித்து, உளவியல் ரீதியாக மிகவும்
பாதிக்கப்பட்டிருந்த மூவருக்கும் இனி புதியதொரு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
வாழ்த்துகள்!
- இரா.ச.இமலாதித்தன்
- இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக