17 பிப்ரவரி 2014

வினவிற்கு பதில்!

 (தேவருக்கு தங்கம் – அதிமுக மீது நடவடிக்கை எடுக்குமா அரசு ?யென்ற இந்த வினவின் கட்டுரைக்கு என் பின்னூட்டத்தை பதிவாக்கி இருக்கிறேன்.)

வளவன் என்ற புனைபெயருடையவர்க்கு,


/தங்கக் கவசத்தின் மதிப்பு 4.70 கோடி ரூபாய். இது அ.தி.மு.க சார்பில் செலவழிக்கப்பட்டாலும், ஜெயலலிதா அன்றைக்கு சென்று வந்த செலவு, பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டத்தினருக்கான குவார்ட்டர்&பிரியாணி செலவு மற்றும் இன்னபிற செலவீனங்களையும் சேர்த்தால் நிறைய வரும். கேட்டால் இது முதலமைச்சரின் புரோட்டோகால் அடிப்படையில் தவிர்க்க முடியாமல் செய்யப்படும் செலவு /

ஆக மொத்த செலவினத்தொகை 4 கோடியாக இருந்தால் என்ன? 40 கோடியாக இருந்தால் என்ன? ஒரு மாநில முதலமைச்சரின் பாதுகாப்பு செலவை குறைக்க சொல்ல எந்த வளவனுக்கும் தார்மீக உரிமை இல்லையே. அதிமுக சார்பில் வழங்கப்பட்ட 4.70 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கவசம் என்பது ஏற்கனவே பசும்பொன்னில் சொன்ன வாக்குறுதி தானே? ஜெயலலிதா சொன்ன எல்லா வாக்குறுதியையும் நிறைவேற்றி விட்டாரா? யென்று கேட்கலாம்; அதைப்பற்றி இங்கே பேசவேண்டிய அவசியமில்லை; ஏனெனில், இது சரிந்த முக்குலத்தோரின் வாக்கு வாங்கியை கைப்பற்றும் யுக்தி என்பது அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் தெரிந்த ஒன்று. எல்லோருக்கும் தெரிந்த இந்த சங்கதி, முக்குலத்து மக்களுக்கும் தெரியாதா என்ன? எல்லாவற்றையும் தேவரின இளைஞர்கள் கவனித்து கொண்டுதான் இருக்கிறார்கள். கண்ணை மூடிக்கொண்டு முக்குலத்து வாக்குகளை ஜெயலலிதாவின் காலடியில் கொட்டிய சமுதாயம் மெல்ல மெல்ல மாறி வந்துகொண்டிருக்கிறது என்பதுதான் எதார்த்தம். எத்தனை கோடி செலவு செய்தாலும், சுயமரியாதையுள்ள இனம் தன் சுயத்தை காண்பித்தே தீரும் என்பது வரலாறு. அந்த வரலாறு மீண்டும் இங்கே வெளிப்படும் நாள் தொலைவில் இல்லை.

/நாட்டில் சாதிய பிளவுகளையும், மோதல்களையும் மற்றவர்களை விட ஜெயாதான் தூண்டி வருகிறார். இதற்கு இந்த தேவர் தங்க கவச திக் விஜயம் ஒரு சான்று./

ஜெயலலிதாவின் இந்த சூழ்ச்சிகளை அனைத்து தரப்பட்ட மக்களும் உணரத்தொடங்கி விட்டார்கள். இது பார்பனீய புத்தி என்பதை முக்குலத்தோரும் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

/கடந்த ஆண்டு தேவர் ஜெயந்தியின்போது ஏற்பட்ட வன்முறைகளில் மூன்றுக்கும் மேற்பட்ட முக்குலத்தோர் இளைஞர்கள் கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். அது ஒரு எதிர்மறை விளைவை உண்டாக்கி, தனது செல்வாக்குத் தளத்தை சரித்துவிடக்கூடாது என்ற ஜெயலலிதாவின் எண்ணமும் இந்த கவசத்தின் பின்னே நிச்சயம் இருக்கும்./

சின்ன திருத்தம்; கடந்த 2012ம்ஆண்டு தேவர் ஜெயந்தியின் போது மதுரை - சிந்தாமணி பகுதியில் வேனில் சென்றவர்களை வழிமறித்து பெட்ரோல் சமூக பயங்கரவாத கும்பல் குண்டு வீசியதில் இறந்தவர்களின் எண்ணிக்கை, பரமக்குடி - பாம்புவிழுந்தான் பகுதியில் அதே நாளன்று பைக்கில் பசும்பொன் சென்றவர்களை வழிமறித்து கற்கால் அடித்து கொலையானவர்களின் எண்ணிக்கை, மருதுபாண்டியர் நினைவேந்தலின் போது காவல்துறையின் என்கவுண்டரால் கொல்லப்பட்ட பிரபு - பாரதி - குமார் மூவரின் எண்ணிக்கையையும் சேர்த்து பத்துக்கும் மேற்பட்ட முக்குலத்து இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பதுதான் நிதர்சனம். நீங்கள் சொல்லிருப்பது போல 3 பேர் என்பது சரியான அளவீடு அல்ல.

/அ.தி.மு.க அரசின் இந்த நடவடிக்கை அவர்களின் சாதிவெறிக்குக் கொம்பு சீவி விடுவது போல் உள்ளது. இதன் எதிர்விளைவாக எதிர் தரப்பான பள்ளர் சாதி இயக்கங்களும் தங்களின் சாதி பிடிமானத்தை இன்னும் கெட்டியாக்கிக் கொள்கிறது./

உண்மை. தேவர் - பள்ளர், வன்னியர் - பறையர் சாதி மட்டுமில்லாது எல்லா சாதி அமைப்புகளும் தற்போதைய சூழலில் தங்களது பிடிமானத்தை இறுக்கமாக்கி கொண்டுதான் இருக்கிறது. அதற்கு காரணம் போலி திராவிட அரசியல் வாதிகளால் தான்.

/‘இந்த காமாட்சிபுரி ஆதீனம் என்ற காமெடி பீஸை நாம் முன்பின் கேள்விப்பட்டது கூட இல்லையே.. ஜெயலலிதாவையே ஆட்டுவிக்கிற அளவுக்கு அவ்வளவுப் பெரிய அப்பாடக்கரா?’ என்று விசாரித்தால் கோவையில் இவர் மீது நிலமோசடி, நிதிமோசடி என்று பல பஞ்சாயத்துகள் சொல்லப்படுகின்றன. ஆதீனம் என்றாலே மோசடி என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்./

காமாட்சிபுரி ஆதீனம் காமெடி பீசு தான் என்பதை எதை வைத்து சொல்கிறீர்கள் வளவன்? உங்களுக்குதான் கேள்வியே படவில்லையென்றுதானே சொன்னீர்கள்? அப்பறம் எப்படி, அவர் செய்யாத நிலமோசடி, நிதி மோசடிகளை சொல்கிறீர்கள்? உங்களுக்கும் ஏதாவது சிறப்பு ஆன்மபலம் வந்து விட்டதா? ஆதாரமில்லாமல், வினவில் எழுத வேண்டாமே! உங்களுக்கு திராணியிருந்தால், அந்த காமாட்சிபுரி ஆதினத்தின் நிதி/நில மோசடியை ஆதாரத்தோடு வினவின் மூலமாக இன்னொரு கட்டுரையை உங்களிடம் எதிர்பார்க்கிறேன். அதுவரை இந்த பொய் குற்றச்சாட்டை சொன்ன உங்களைத்தான் காமெடி பீசாக நினைக்கத்தோன்றும்.  மேலும், சேவ் தமிழ்ஸ் மீதான் உங்களது வெறுப்பும் கட்டுரையின் இறுதி பத்தியில் பட்டவெளிச்சமாக தெரிகிறது. ஏனெனில், சாதி கட்டமைப்பு, ஹிந்து மதம் போன்றவற்றின் மீதான உங்குளுக்குள் உள்ள காழ்ப்புணர்ச்சி மட்டுமே இந்த கட்டுரையின் நெடுகிலும் தென்படுகிறது. உங்களது தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை கட்டுரையில் திணிக்க வேண்டாம் என்பது என் விருப்பம். மற்றபடி இந்த கட்டுரையின் வாயிலாக சொல்லப்பட்டுள்ள அரசியல் வியாபாரிகளின் நரிக்குணத்தையும், அனைத்து சாதிக்களிலும் சிக்குண்டுள்ள எளியவர்களின் உணர்வை வெளிக்காட்டும் விதமாக உள்ளது.

/இந்த மக்கள் விரோத அணியையும் என்றைக்கு தேவர் சாதி மற்றும் தாழ்த்தப்பட்ட சாதி உழைக்கும் மக்கள் புரிந்து கொள்கிறார்களோ அன்றுதான் தென்மாவட்டங்களில் உண்மையான சமூக நல்லிணக்கம் நிலவும்./

தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமல்ல; தேவர் சாதி மக்களிலும் பெரும்பாலோனோர் உழைக்கும் மக்களே என்பதையும் வளவன் போன்ற புனைப்பெயர் எழுத்தாளர்களும் புரிந்து கொண்டு அரசியல் சித்தாந்தங்களை சீர்திருத்தினால் நலம். ஏனெனில், நானும் விவசாய பெருங்குடியில் வளர்ந்த காவிரி டெல்டா தேவர் மகன்தான். உழைக்கும் மக்களான விவசாயி மகனும் தான் என்பதால் இங்கே இந்த கட்டுரைக்கு என் பின்னோட்டத்தை இடுகிறேன். எல்லா சாதியில் உழைக்கும் வர்க்கமும் உண்டு, உண்டு கொழுத்து திரியும் கூட்டமும் உண்டு. இங்கே தலித், ஒடுக்கப்பட்ட, ஆண்ட சாதி, அடிமை சாதி என்ற பாகுபாடு துளியும் இல்லை.


- இரா.ச.இமலாதித்தன், நாகப்பட்டினம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக