27 பிப்ரவரி 2014

இந்திய கிரிக்கெட் அணி பலமா? பலவீனமா?

கோலி, ரஹானே அபாரம்: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா.
- தி ஹிந்து

வின்னர் விராத்: இந்தியாவிடம் வீழ்ந்தது வங்கதேசம்.
- தினமலர்

வங்காளதேசத்தை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியது இந்தியா விராட் கோலி அபார சதம்.
-தினத்தந்தி

வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில் வெற்றி தேடித்தந்தார் கோஹ்லி.
- தினகரன்

இன்னும் எத்தனை நாளுக்குத்தான் ஃபேட்ஸ்மேன்களை மட்டுமே நம்பி இருக்க போகிறது இந்திய கிரிக்கெட் அணி? சச்சின், கங்குலி, சேவாக், தோனி, கம்பீர் யென்ற வரிசையில் இப்போது கோஹ்லியை பிடிச்சிக்கிட்டு தொங்குறதுக்கு வெட்கமாவே இருக்காதா? உருப்படியான ஒரு பவுலரை உருவாக்க வக்கிலாமல் போய்விட்டதா இங்கே? நேற்றைய வங்கதேசதுக்கு எதிரான போட்டியில், வருண் ஆரோன், முகமது சமி, புவனேஷ்வர் குமார் உள்ளிட்ட வேக பந்துவீச்சாளர்களின் செயல்பாடு படுமோசம். இந்தமாதிரியான ஒன்றுக்கும் உதவாத பந்துவீச்சை கொண்ட அணியை வைத்துக்கொண்டு இந்திய அளவிலான ரஞ்சி ட்ராபியை கூட வாங்க முடியாது என்ற நிலையில் இண்டர்நேசனல் போட்டிகளில் பங்கேற்று என்ன ஜொலிக்க போகிறார்கள்? இப்போது நடந்து கொண்டிருக்கும் ஆசிய கோப்பையையும் இந்தியா கை நழுவ விட்டால், அதற்கு ஃபேஸ் பவுலிங் மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் மட்டுமே காரணமாக இருக்கக்கூடும் என்பது என் அனுமானம். மேலும், முக்கியமாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டன்கன் ஃபெளக்சர்ன்னு ஒருத்தர் இருக்காரே, அவர் என்ன பண்றாருன்னு எப்போது பிசிசிஐ கேட்குதோ? அதுவரையிலும் இந்திய கிரிக்கெட் அணி சரிவை நோக்கியே செல்லும் என்பதே எதார்த்தம்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக