2009ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதிக்கு முன்னாடியே பலகாலங்கள் ஆர்குட் - கூகிள் குரூப்ஸ் - கூகிள் பஸ் - ப்ளாக்கர் யென்று இணையத்தில் செயல்பட்டிருந்தாலும், 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதிதான் எனக்கு ஃபேஸ்புக் அறிமுகம் ஆனது. அப்போது மூலமான என் பதிவுகளும் இங்கே ஆரம்பமானது. இணையம் மூலமாக எத்தனையோ நபர்களை கடந்த ஏழெட்டு வருடங்களில் கடந்து வந்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக ஆர்குட்டில் பல உறவுகள் கிடைத்தார்கள். அதன் பிறகு கூகிள் குழுமம் மூலமாக பல நண்பர்கள் கிடைத்தார்கள். அதன் பிறகு ஃபேஸ்புக் மூலமாகத்தான் அதிகமான உறவுகளும் நண்பர்களும் அறிமுகமானார்கள். ஃபேஸ்புக்கில் கடந்த ஐந்து வருடமாக செயல்பட்டிருந்தாலும் இன்னமும் பல புதிய நபர்களை கடந்து கொண்டே வந்திருக்கின்றேன். என்னை இன்னமும் புதியவனாகவே அடையாளப்படுத்தி கொண்டிருக்கும் எம்பெருமான் முருகா நன்றி!
- இரா.ச.இமலாதித்தன்
இமலாதித்தன் என்ற இளவலை எங்களுக்கு அளித்த இணையத்திற்கு நன்றி.
பதிலளிநீக்கு