29 மே 2021

இயக்குனர் வீணை எஸ்.பாலச்சந்தரின் முன்னோடி சிந்தனை!

வெற்றிக்கரமான இயக்குனர்களாக அடையாளப்படும் ஷங்கர், அட்லி, ஏ.ஆர்.முருகதாஸ், பா.ரஞ்சித் என பலரும் கதை திருட்டு விவகாரங்களில் சிக்கியவர்களே. பிரகாஷ்ராஜ், பிரிதிவிராஜ், கோபிகா நடிப்பில் உருவான 'வெள்ளித்திரை' திரைப்படத்தில் இம்மாதிரியான கலைத்திருட்டை அடிப்படையாக கொண்ட கதைக்களத்தையே இயக்குனர் விஜி உருவாக்கிருப்பார்.
ஆனால், 1964ல் வெளிவந்த 'பொம்மை' என்ற திரைப்படமானது வேறொரு பார்வையை நமக்கு தருகிறது. வீணை எஸ். பாலச்சந்தர் இயக்கி, இசையமைத்து நடித்த 'பொம்மை' திரைப்படத்தின் இறுதிக்காட்சிகளை கீழே இணைத்திருக்கிறேன். பார்த்தால் என்ன சொல்ல வருகின்றேனென உங்களுக்கு எளிதாக புரியும்.
கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி, பிலிம் நியூஸ் ஆனந்தன் என அந்த 'பொம்மை' திரைப்படத்தில் பங்காற்றிய அனைத்து துணை நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள், துணை இயக்குனர்கள், கலை இயக்குனர், ஆடை வடிவமைப்பாளர், பட தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர், ஒப்பனையாளர், தயாரிப்பு நிர்வாகத்தில் உள்ளோர், வாகன ஓட்டிகள் என அனைவரையும் இயக்குனரான 'பத்ம பூசன்' வீணை. எஸ். பாலச்சந்தர் அறிமுகப்படுத்தி வைத்திருக்கும் பண்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
'World Movies Museum' குரூப்பில் இந்த காட்சியை அறிமுகப்படுத்தி பதிவு செய்த Muniyasamy Ramakrishnan அவர்களுக்கு நன்றி! இந்த வீடியோவை யூ ட்யூப் வாயிலாக பார்க்க: https://www.youtube.com/watch?v=LL_EEkZJw50
- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக