25 மே 2021

யார் தமிழர்? என்பதில் ஆரிய திராவிட மோதல்!









முதலில்,

'யாரோடும் பகையில்லை!'யென திராவிட ஸ்டாக் சுப.வீரபாண்டிய செட்டியார் சொன்னார்.

இப்பொழுது,

ஹெச்.ராஜா பீஹாரி எனில், மு.கருணாநிதி குடும்பம் எப்படி தமிழரானது? என ஆரிய ஸ்டாக் கிஷோர்.கே.சுவாமி ஐயங்கார் கேட்கிறார்.

ஆரியமும், திராவிடமும் மாறி மாறி டி.என்.ஏ. டெஸ்ட் எடுத்து கொண்டிருக்கின்றன.

'தமிழன் எங்கு சென்றாலும் தமிழன் தான்; இனம் என்றுமே மாறாது' என பி.டி.ஆர்.பழனிவேல் தியகராஜன் முதலியார் சொன்னதால் வந்த எதிர்வினைகளே, இப்பொழுது அறங்கேறிக் கொண்டிருக்கிறன.
இதையேத்தான் முன்பு 'நாம் தமிழர் கட்சி' சொன்ன பொழுது, திராவிட ஸ்டாக்குகளும், ஆரிய ஸ்டாக்குகளும் கண்டபடி வசை பாடி கொண்டிருந்தனர். கேலி செய்த அவர்களையே, காலம் கேள்வி கேட்க வைத்திருக்கிறது.


பின்னிணைப்பு:



#belongstodravidianstock என பெயரில் சேர்த்து கொண்ட திராவிட சுப.வீ. போன்றோர்கள், ஆயிரமாண்டு ஆரியப்பகை என ஒரு பக்கம் பேசிக்கொண்டே, மறு பக்கம் யாரோடும் பகையில்லை என்றும் முட்டு கொடுக்கின்றார்கள். சென்றாண்டு வரை கூட பன்றிகளுக்கு பூநூல் அணிவிக்கும் போராட்டமெல்லாம் திராவிட ஸ்டாக்குகள் செய்தார்கள். பூநூலை பார்பனர்கள் மட்டுமே அணிவதாக நினைத்து கொண்ட அவர்களது பகுத்தறிவை பார்த்து ஊருலகமே வியந்த நிகழ்வுகள் அவை. எஸ்.வீ.சேகர் வீட்டிற்கு சென்று பால் பாக்கெட் கொடுக்கின்ற கேவலமென விமர்சித்தார்கள். இன்றோ, பிராமணர்களின் வீட்டுக்கே சென்று அரிசி பருப்பு கொடுப்பதற்கெல்லாம், பொழிப்புரை எழுதிக்கொண்டிருக்கின்றனர்.
இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்.

சுப.வீயின் இந்த ட்வீட் மூலம் அவர் சொல்ல வந்ததில் கடைசி வரி மட்டும் விடுபட்டிருக்கிறது. இவர்களை பொறுத்த வரையில், ஆரியர் திராவிடர் என "யாரோடும் பகையில்லை; தமிழர்களை தவிர..."


- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக