03 பிப்ரவரி 2016

தமிழனை வஞ்சிக்கும் ஹிந்தியம்!

தேர்தல் நேரத்தில் கூட்டணி பேரத்தில் தமிழக சில்லறை கட்சிகளெல்லாம் மும்முரமாக இருக்கும் நேரத்தில், கேவலமானதொரு ஹிந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒன்று வெளிவந்துள்ளது. விவசாய குடும்பத்தை சேர்ந்த என்னை போன்ற பலருக்கு இந்த தீர்ப்பு ஹிந்தியத்தின் மீதான நம்பிக்கையை மேலும் வெறுக்கடிக்கும்.

கேரளாவுக்கும் கர்நாடகாவுக்குமான கெயில் பைப் லைன்களை நேரடியாக அந்த இரு மாநில எல்லைக்குட்பட்ட பகுதியின் வழியாகவே கொண்டு சொல்வதுதான் எளிதான மற்றும் சரியான வழிமுறை. ஆனால் இவ்விரு மாநிலத்தின் விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, மலையாளிகளின் சூழ்ச்சியால் தேவையேயில்லாமல் தமிழக எல்லைக்குள் இந்த கெயில் பைப் லைனை பதிக்க திட்டத்தை மாற்றியமைத்தனர். இதனால் பொருட் செலவும் அதிகம்; பயண தூரமும் அதிகம். ஆனாலும் தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் தர மனமில்லாத காவிரியும் - பெரியார் அணையும் வைத்திருக்கும் கேரள - கர்நாடக மாநிலங்களின் விவசாய நிலமக்கள் பாதிக்காமல் இருக்க தமிழக நிலத்தை கற்பழிக்க நினைத்திருந்தனர்.

அதன்படியே ஹிந்திய உச்சநீதிமன்ற தீர்ப்பும் அமைந்து விட்டது.

விவசாயத்தை தமிழனிடமிருந்து முற்றிலுமாக அழித்தொழிக்க நினைக்கும் ஆரிய கூட்டமும், அதற்கு துணை போகும் திராவிட கூட்டமும் இங்கு அழித்தொழிக்கப்படாதவரை நாளுக்கு நாள், தமிழனின் ஒவ்வொரு பாரம்பரிய அடையாளமும் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக