23 பிப்ரவரி 2016

என்னமோ ஏதோ!

-01-

இக்கட்டான வேளையிலும் கூட  ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிக்கும் அடிமைகளை, ஜெயா நியூஸ் அல்லாத மற்ற நியூஸ் சேனல்களில் மக்கள் புலம்புவதை மட்டும் பார்க்க சொல்லுங்க. அவர்களின் வலியும், வேதனையும் புரியக்கூடும்.

-02-

மூச்சுக்கு முன்னூறு தடவ கூறு போட்டு விஜய் டிவியில வித்துக்கிட்டு இருந்த அந்த ஹைடெக் சிட்டி 'அருண் எக்ஸல்லோ' இருந்த இடத்த, இப்போ போட் ஹவுஸாவா மாத்திட்டாங்க?

-03-

கோவிலெங்கும் வாட்சப்போடு தான், அனைத்து கோவில்களிலும் தரிசனம் செய்து கொண்டிருந்தனர், இளவட்டமெல்லாம்!

-04-

கடவுள் மறுப்பாளராக காட்டிக்கொண்ட வடுகர் ஈ.வெ.ரா.வை இரட்சிக்க வந்த கடவுள் போல அர்சித்த காலமெல்லாம் தலைகீழாய் மாறிபோனது. ஆரியருக்காக ஆங்கிலேயன் சூட்டிய ஹிந்து என்ற மாயை உடைத்து வீரத்தமிழர்களாக முன்னிற்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆரியனுக்காக திராவிடன் என்ற போர்வையில் வடுகர்களும், திராவிடனுக்கு எதிராக ஆன்மீகம் என்ற பெயரில் பிராமணர்களும், தமிழர் முதுகில் ஏறி பயணித்த பாதையெல்லாம் முடிவுற தொடங்கி இருக்கிறது.
இவற்றிற்கெல்லாம் சீமானும் ஒரு காரணம் என்பது தான் மறுக்க முடியாத உண்மை. வெற்றியோ தோல்வியோ களத்தில் நிற்பதில் தான் அரசியல் ஆண்மை அடங்கிருக்கிறது. அந்த வகையில், சாதி மத ஆதரவின்றி அனைத்து தொகுதிகளிலும் தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துகள்!

-05-

கடந்த நாலரை வருடங்களாக பள்ளம் படுகுழிகளோடு நாறிப்போயிருந்த சாலைகள் அனைத்தும், தேர்தலுக்காக அவசரகதியில் அரைவேக்காட்டு தனமாய் தார் பூசப்பட்டு மாறிப்போயிருக்கின்றன. கட்சி வேறுபாடின்றி அனைத்து அரசியல்வாதிகளும் தெளிவாகத்தான் இருக்கின்றனர். ஆனால் அதை உணர வக்கற்ற வாக்காளர்களான மக்கள் தான், இலவசங்களுக்காக கையேந்தி மதிமயங்கி கிடக்கின்றனர்; டாஸ்மாக், ரேசன் கடையென!

-06-

எனக்கு தெரிந்து பெரும்பாலானோர் மகாமகத்திற்காக எங்க டெல்டாவின் புண்னியபூமியான கும்பகோணத்திற்கு சென்று வந்து கொண்டிருக்கின்றனர். அனைவருக்கும் ஆன்மீக நாட்டம் பெருக்கெடுத்து விட்டதா? என தெரியவில்லை. நானும் கூட நேற்றைக்கு முந்தைய நாள் சென்று வந்தேன்.
அண்மைகாலமாக கோவில் வழிபாட்டுத்தலங்களில் மக்கள் கூட்டம் அதிகமாகி கொண்டே இருக்கிறது. குறிப்பாக இளைஞர்களும் பக்தி மார்க்கத்தில் அதிக ஆர்வம் காட்டி வருவதையும் அறியமுடிகிறது. இந்த மண்ணின் தன்மை படிப்படியாக அதன் பூரணத்தை அனுபவிக்க தொடங்கி இருப்பதாகவே உணர்கிறேன்.

நன்றி இறைவா!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக