18 அக்டோபர் 2014

தேவனும் தொட்டி மீனும்!

தேவர் சாதியினரை பழமைவாதி எனவும், தொட்டி மீன்கள் என்றும் சிலர் இங்கே சொல்வதை அறிய முடிகின்றது. எனக்கு இந்த தொட்டி மீன்களை பற்றியும் தெரியும். கூடவே விலாங்கு மீன்களை பற்றியும் தெரியும். ஏனெனில் தொட்டி மீனாவது பழமைவாதி போல கிணற்று தவளையாக இருந்துவிடும். ஆனால் இந்த விலாங்கு மீன் என்பது, மீனுக்கு முகத்தையும் – பாம்புக்கு வாலையும் காட்டி உயிர்பிழைக்கும். அது போலத்தான் இங்கே பல சாதி ஒழிப்பு போராளிகள் இருக்கின்றனர். வெளியில் தலித்/ சிறுபான்மை/ சாதி ஒழிப்பு/ ஆதிக்க சாதிவெறி யென பேசி விட்டு, சாதிய அடிப்படையில் கிடைக்கும் சலுகைக்கு பின்வாசலை ஏறுவர்.

தேவன் என்பதில் என்ன போலி பெருமை இருக்கின்றது. இதில் என்ன போலியை கண்டு பிடிக்கின்றனர் என்பதே தெரியவில்லை. வழி வழியாக என் பாட்டன் அடைக்கலத்தேவன், தாத்தன் இராமமிர்த தேவர், என தந்தை வழியாக உபயோகப்படுத்தி வந்த தேவன் என்ற பட்டத்தை நான் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கு? இதை பெருமையாகவோ – சிறுமையாகவோ – போலியாகவோ நான் நினைத்ததில்லை. இது எனக்கான அடையாளம் அதில் பெருமை என்று மற்றவர்கள் நினைத்தால் நான் செய்ய முடியும்? அதிலும் போலி பெருமையென அவர்கள் சொல்வதில் எனக்கு எந்தவித கவலையுமில்லை. இந்த அடையாளம் தேவையா என்று அவர்களும் பதிலுக்கு கேள்வி கேட்கக்கூடும். அடையாளமில்லாமல் இங்கே எதுவுமில்லை. அது உயிருள்ள அனைத்துக்கும் ஓர் அடையாளமுண்டு. அதுபோலத்தான் இந்த தேவன் என்பதும். இங்கே தேவன் என்பதால் எந்த போலியும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை.

 
இங்கே பெரும்பாலானோரின் எண்ணமாக ஆட்சிபீடத்தில் இருக்கும் தேவரின அரசியல் வாதிகளை பற்றியே பேசுகின்றனர். எதார்த்தமாக யோசித்து பார்த்தால், பணம் பதவி புகழ் என்பதெல்லாம் கிடைக்கும் என்று தோன்றினால் சாதி/மத வேறுபாடின்றி எவன் காலிலும் விழ எந்த மத/சாதிக்காரனும் காத்துக்கொண்டு தான் இருக்கின்றனர். அதுபோலத்தான் தமிழகத்தில் பெரும்பான்மையாக இருக்கும் தேவரின தலைவர்களும் தங்களது இடத்தை தக்க வைத்து பணம் பதவி புகழை சம்பாரிக்க ஜெயலலிதா/கருணாநிதி என பலரது காலிலும் விழுந்து கிடக்கின்றனர்.

இதில் இங்கே அடிமையாக இருக்கும் அடிமை அடையாளமான ஓபிஎஸ் பற்றியெல்லாம் யாருக்கும் கவலை இல்லை. வேண்டுமென்றால், தேவர் சாதியை சார்ந்த ஒரு ஆள், தமிழக முதலமைச்சராக இருந்தார் என பின்னாட்களில் சொல்லிக்கொள்ள மட்டுமே உதவும். மத்தப்படி எவன் ஆட்சியில் இருந்தாலும் எவனுக்கும் லாபமில்லை. அவன் என்ன சாதியாக இருந்தாலும்… இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் ஓபிஎஸ் போன்றோர் தான் ஒட்டுமொத்த தேவரினத்தின் அடையாளமென நினைப்பதும், இந்த சாதியை சேர்ந்தவர்கள் அனைவரும் சாதிவெறியர்கள் என்றும் செம்மறி ஆட்டு மந்தை போன்ற எண்ணத்தை மனதில் இருந்து தகர்த்தெறிய முனையுங்கள். அதை விட்டுவிட்டு, சாதிவெறியன் என்று சொல்லும் ஒவ்வொரு முறையும், சாதி பாகுபாடற்ற மனநிலையில் உள்ள பல தேவர் சாதி தமிழனை, இன்னும் சாதி வெறியனாக மாற்றிக்கொண்டிருக்கின்றீர்கள் என்பதே நிதர்சனம்.


- இரா.ச.இமலாதித்தன்

17 அக்டோபர் 2014

தேவர்மகன்களின் சுயரூபம்?!

“காட்டுமிராண்டிக் கொலைகளுக்கு… யாரடா கௌரவக் கொலை.. என்று பெயரிட்டது” - வினவு

http://www.vinavu.com/2014/10/16/vimaladevi-honour-killing-mugilan-cartoon/
சோ கால்டு காட்டுமிராண்டி கொலைகளுக்கு கெளரவக்கொலை என்ற பெயரை யார் வைத்தார்கள் என்பதை ஆய்வு செய்யும் இதே வேளையில், பள்ளுப்பாட்டு பாடல்பெற்ற பண்டைய காலம் தொட்டே பள்ளர் என்று அறியப்பட்டவர்களுக்கு, தேவேந்திரகுல வேளாளர் என்ற பெயரை யார் வைத்தார்கள் என்பதையும் ஆய்வு செய்து கேலி சித்திரம் ஒன்றை ஓவியர் முகிலன் மூலமாக வரைய சொல்லி தனிப்பதிவை வினவு போடலாம். மேலும், இந்த திரு.பாரதிராஜா - திரு.கமலஹாசன் - திரு. சசிகுமார் மூவருமே மூன்று வித சாதி பின்னணிகளை கொண்டவர்கள். அதிலும் திரு.பாரதிராஜா மட்டும் தான் தேவர் சாதியை சேர்ந்தவர். அவர் சாதியால் தேவரென அறியப்பட்டாலும் தேவர் சாதி சார்ந்த விசயத்தில் மாற்று கருத்துடையவர். தன் மகனுக்கு கூட வேறுவொரு சாதியில் தான் திருமணம் முடித்துள்ளார் என நினைக்கின்றேன்.

ஆனால், இந்த மூவருக்குள்ளும் உள்ள ஒரே ஒற்றுமை என்னவெனில், மூவருமே தென் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சாதியால் வேறுபட்டிருந்தாலும் மக்களின் வாழ்க்கையைத்தான் படமாக பதிவு செய்துள்ளார்கள். அது தேவர்மகன் ஆகட்டும். வினவு திரை விமர்சனம் எழுதிய படமான சுந்தரபாண்டியனாக இருக்கட்டும். இது மக்களின் நடைமுறை வாழ்க்கையை தான் படத்திலும் காட்டிருப்பார்கள். இதை விமர்சிப்பது தவறில்லை. ஆனால், உங்களது விமர்சனத்தை கண்டு அஞ்சு யாருமே இனி தேவர் சாதி மக்கள் சார்ந்த படமே எடுக்கமால் இருக்க போவதில்லை.

விரைவிலேயே திலகர் என்ற படம் வெளிவர விருக்கின்றது. அதுவும் முழுக்க முழுக்க தேவர் சாதி படம் தான். திருநெல்வேலி - வெள்ளலூர் கிராமத்தில் நடந்த உண்மை சம்பவம் தான். திலகரை, தேவர்மகன் பாட் 2 என்றும் சொல்கின்றனர். அந்த படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் வெள்ளாள பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்தவர். அவருக்கு திரைத்துறையில் பாலுத்தேவர் என்ற அடைமொழியும் உண்டாம். இந்த பாலுத்தேவர் என்ற காதாப்பாத்திரத்தை வைத்து தான் பாரதிராஜா, சாதிங்கிறது படிச்சு வாங்கின பட்டமா?ன்னு கேட்டாரு. அவரையே இன்னைக்கு கேலி சித்திரம் மூலம் விமர்சிக்கிறீங்க. தொடரட்டும் உங்கள் பணி.

நிறைய தேவர் சாதி இயக்குனர்கள் சமகாலத்தில் படம் இயக்கி கொண்டே இருக்கின்றனர். மேலும் பல புதுமுக இயக்குனர்களும் அணிவகுத்து காத்திருக்கின்றனர். குட்டிப்புலி படத்தை இயக்கிய தேவர்சாதி இயக்குனர் முத்தையாவின் அடுத்த படைப்பான கொம்பனுக்கும், பெருமாள் பிள்ளை இயக்கிய திலகருக்கும் வினவு விமர்சனம் எழுதுவீர்களென நம்புகிறேன். ஏனெனில் உங்களுக்கு அட்டைக்கத்தி/மெட்ராஸ் இயக்குனர் ரஞ்சித் மட்டும் தான் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக தெரியலாம். ஏனெனில் அவர் தேவர்சாதி இல்லை என்பதால்!

- இரா.ச.இமலாதித்தன்

பறையோசை தமிழனின் இசை!

பறை இசை மற்றும் தப்பாட்டம் போன்றவை சாதீய ஒடுக்குமுறையின் விளைவாக தலித் சமூகத்தின் ஒரு பிரிவினரால் செய்யப்பட்டவை. அவைகள் அந்த ஒடுக்குமுறையை மறு உறுதி செய்வதாக இருப்பதால் அவை தடை செய்யப்படவேண்டும்.

- திரு. ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (பி.பி.சி. தமிழ்)


எவ்வளவு முட்டாள் தனமான கோரிக்கை இது? பறையோசை என்பது தமிழனின் அடையாளம். அந்த ஒலிக்குள் தானே தமிழர் வாழ்வியல் சார்ந்த நல்லது - கெட்டது ஒளிந்துருக்கின்றது. பக்தியையும், மகிழ்ச்சியையும், செய்தியையும், பிறருக்கு பரப்பும் ஓர் இசை ஊடகமாக இருந்து வந்த பறையோசையை தடை செய்ய சொல்வது அயோக்கிய தனமானது. மேலும், ஒரு மனிதனின் இறப்பில் தானே, பிறப்பை விட சடங்கு சம்பிரதாயங்களுக்கு அதிக முக்கியத்துவமும் கொடுக்கப்படுகின்றது. அங்கே பறையோசை தானே முதன்மையானதாக கருதப்படுகிறது. சராசரி தமிழனின் வாழ்வியலோடு தொடர்புடைய பறையோசையை, அடிமை முத்திரை போல நினைத்து, அதை தடை செய்ய சொல்லும் எண்ணத்தை திரு. ரவிக்குமார் இனியாவது மாற்றிக்கொள்ள வேண்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

சாதி தேவையில்லை, ஆனால் சாதிக்கொரு முதல்வர் தேவை!

தமிழகத்தில் அடுத்த ஆறு மாதத்தில் சுழற்சி முறையில் (கவுண்டர், வன்னியர், தலித் என) ஒவ்வொரு சாதி எம்.எல்.ஏ.க்களுக்கும் முதல்வர் பதவி வழங்கப்படலாம். - செய்தி.


இந்த முடிவு உண்மையெனில் அது முட்டாள் தனமானது என்பதை செல்வி ஜெயலலிதா பின்னாட்களில் புரிந்து கொள்வார். ஓ.பி.எஸ் முக்குலத்து சமுதாயம் என்றாலும், தனிப்பட்ட முறையில் சாதிக்காக எதையும் செய்ததில்லை. ஆனால் பரமக்குடி சுந்தர்ராஜன் - பள்ளர் சாதி என்பதால், அமைச்சராக இருக்கும் போதே பல விசயங்களை தன்னுடைய சாதிக்கு செய்கிறார் என்பது அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டாக இருக்கின்றது. முக்கியமாக, ஓபிஎஸ் உள்ளிட்ட ஒருசில பேர்களை தவிர இரண்டாம் கட்ட தலைவர்களே அதிமுகவில் இல்லை. மூன்றாம் கட்ட தலைவராக இருக்கும் ஒருவரை, சாதியை காரணம் காட்டி முதல்வர் ஆக்கினால் ஆட்சி ஏளனமாக்கப்படும். குறிப்பிட்டவர்களின் ஆட்சிக்காலத்தில் சாதிய முத்திரை குத்தப்படவும் வாய்ப்பிருக்கின்றது. உட்கட்சிக்குள் யார் பெரியவன் என்ற ஈகோ வளரும். உள்ளடி வேலைகளால் ஆட்சிக்கு களங்கமும் விளையும். எனவே, இப்போது உள்ள நிலையில் ஓபிஎஸ்சை அனைவரும் ஏற்று கொண்டு விட்டார்கள். அதனால் அவரே மீதமுள்ள ஆட்சிக்காலத்தையும் முழுமையாய் ஆள்வதுதான் விவேகமாக அமையும். பார்க்கலாம், புரளிகளை கிளப்பும் இந்த மஞ்சள் பத்திரிகைகளின் ஆருடத்தை...

- இரா.ச.இமலாதித்தன்

16 அக்டோபர் 2014

நாகையின் நாயகர்கள்!

கண்ணகி, காரைக்கால் அம்மையார், கம்பன் மட்டுமல்ல, இந்த இமலாதித்தனும் பிறந்த ஊருதாங்க நம்ம நாகப்பட்டினம்!

நாகப்பட்டினத்தில் பிறந்த கம்பனுக்கு கல்யாணம் ஆய்டுச்சா? இல்லையா?ன்னு தெரியல. இவரை தவிர நாகப்பட்டினத்தில் பிறந்த காரைக்கால் அம்மையாருக்கும், கண்ணகிக்கும் கல்யாணம் ஆனது என்னவோ உண்மைதான். ஆனால், கல்யாணத்துக்கு பிறகு தான் ஒரு மிகப்பெரிய வரலாறே உருவானது. ஒன்று மாங்கனியால்! இன்னொன்று சிலம்பினால்! இன்று இருவருமே வள்ளுவர் சொன்னது போல தெய்வத்துள் வைக்கப்பட்டு விட்டனர். இதை எதுக்கு சொல்றேன்னா, நாங்களும் நாக்கு தமிழ் மணக்கும் நாகப்பட்டினத்து காரன் தான்... எங்களுக்கும் இன்னும் கல்யாணம் ஆகலை. கல்யாணம் ஆனதுக்கு அப்பறமா நாங்களும் தெய்வம் தான்!

”எப்போ கல்யாணம்? எப்போ கல்யாண சாப்பாடு போடுவீங்க? சீக்கரமா மெரேஜ் ட்ரீட் கொடுங்க.”ன்னு ஒருநாளைக்கு ரெண்டு பேராவது சுழற்சி முறையில் இப்படி கேட்குறதுனாலேயே, இனி நித்தியானந்தா மாதிரி ஆய்டலாம்ன்னு இருக்கேன்.

சீடர்கள்* தொடர்புக்கு:-

ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சா இமலாதித்தனந்தா
ஆதித்த பாலபீடம்
ஆதித்தனந்தபுரம்
நாகப்பட்டினம்.

( *பெண்களுக்கு முன்னுரிமை )


- இரா.ச.இமலாதித்தன்

கல்யாணம் சீக்கிரம் செய்வதால் ஏற்படும் விளைவுகள்: பகுதி -1


01. சாயுங்காலம் ஆறு மணிக்கு சேவக்கோழி மாதிரி வீட்டுக்குள்ள அடைஞ்சிடணும்.

02. பலவருட உயிர் நண்பன்கிட்ட போன்ல பேசும் போது கூட வெயிட்டிங் கால் வராத மாதிரி எச்சரிக்கையா இருக்கணும்.

03. சம்பளம் போடுற ஏடிஎம் கார்டோடு பின் நம்பரையும் ஒரு மாசத்துக்குள்ள மறந்துட வேண்டிருக்கும்.

04. இந்த மாதிரி ஃபேஸ்புக்ல ரொம்ப நேரம் வெட்டியா மொக்கை போட முடியாது.

05. ஈமெயில், ஃபேஸ்புக் போன்ற இணையம் சார்ந்த பாஸ்வேர்டுகள் அனைத்தும் பொதுவுடைமையாக்கப்படும்.

06. நம்ம நல்ல சம்பளத்துல வேலை பார்க்கிறோமோ இல்லையோ, ஆனால் நமக்கு மச்சான் முறையில் உள்ள அரியரே கிளியர் பண்ணாத படிப்பாளிக்கு நல்ல சம்பளத்துல வேலை வாங்கி கொடுத்திடணும்.

07. பெத்தெடுத்த அம்மா-அப்பாவையெல்லாம் சண்டைக்காரன் மாதிரி பகையாளியாக்க தயாரா இருக்கணும்.

08. காய்கறி கட் பண்ண தெரிஞ்சா மட்டும் போதாது, ருசியா சமைக்க தெரியணும், கூடவே சமையல் பாத்திரமும் கழுவ தெரிஞ்சிருக்கணும்.

09. வாரத்துக்கு ரெண்டு நாளு பொண்டாட்டி துணிமணியெல்லாம் துவைச்சு கொடுத்துடணும்.

10. பொண்டாட்டியோட ஒன்னுவிட்ட சித்தப்பனோட பெரியப்பன் பேத்திக்கு வேலைநாளுல கல்யாணம் வச்சாலும் ரெண்டு நாளு முன்னாடியே லீவு போட்டு கல்யாணத்து போய்டணும், முக்கியமா மணமக்களுக்கு மோதிரம் போடணும்.

தொடரும்...

- இரா.ச.இமலாதித்தன்.

15 அக்டோபர் 2014

என்கவுன்டர் - யார் தந்த தைரியம்?

இன்று இரவு 8 மணிக்கு தந்தி டிவியின் 'ஆய்த எழுத்து' நிகழ்ச்சியில் 'என்கவுன்டர் கொலைகள்' பற்றிய நேரலை விவாதம் ஒளிபரப்பாகவுள்ளது. 2012ம் ஆண்டு மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தல் தினத்தில் நடந்த கசப்பான சம்பவத்திற்கு பலி தீர்க்கும் விதமாக, வெள்ளைத்துரையால் என்கவுண்டரில் கொல்லப்பட்ட 'பிரபு - பாரதி - குமார்' உள்ளிட்ட அப்பாவிகளின் வரிசையில், இப்போது காளிதாசின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான சையது முகமது பற்றியும் பேசுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

கிட்டத்தட்ட எட்டு கோடி பேருள்ள தமிழ்நாட்டு மக்கள் தொகைக்கு சில ஆயிரம் காவலர்கள் மட்டுமே இருக்கின்றார்கள் என்பதே எதார்த்தமான உண்மை. அந்த சில ஆயிரம் காவலர்களுக்கு, சம்பளம் மட்டுமில்லாமல் போட்டிருக்கும் காக்கி யூனிஃபார்ம் - ஷூ வரைக்கும் மக்கள் பணம் தான். போதாகுறைக்கு லாரி வந்தால் பிச்சைக்காரன் மாதிரி கையை நீட்டி லஞ்சம் வாங்கி வயிறு வளர்க்கும் தொப்பையும் மக்கள் பணம் தான். இப்படி மக்கள் பணத்திலேயே வாழ்க்கையை நடத்தி, மக்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள் என்று நம்பினால், விசாரணைக்கு அழைச்சிட்டு போய் கொலை செய்யும் தைரியத்தை கொடுத்தது யார்?

முன்னாள் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா வசம் இருந்த காவல்துறையில் பணியில் இருந்த வெள்ளைத்துரை தான், 2012ம் ஆண்டு மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தலின் போது பிரபு-பாரதி-குமார் உள்ளிட்ட மூவரை என்கவுன்டர் கொலை செய்தார். இப்போது அதே காவல்துறை தான் இந்நாள் முதல்வர் திரு ஓ.பன்னீர்செல்வத்திடமும் இருக்கின்றது. இப்போதும் வெள்ளத்துரையை போலவே காளிதாசு என்ற எஸ்.ஐயும் சையதுமுகமது என்ற இளைஞனை குருவி சுடுவது போல சுட்டு கொன்றிருக்கின்றார். குருவியை சுட்டாலே வழக்கு போடுறாய்ங்க. ஆனால் மனுச உயிரோட மதிப்பு இவ்ளோதானா?

- இரா.ச.இமலாதித்தன்