21 பிப்ரவரி 2015

கெளரவ கொலைகளுக்கு பின்னால்...

தமிழகத்தில் கெளரவ கொலைகள் நடைபெறவில்லை. அப்படி நடந்தால், அதை தடுக்க தற்போதுள்ள சட்டங்களே போதுமானது.

- முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

இதன் பின்னாலுள்ள அரசியல் பற்றியெல்லாம் பேசவே தேவையில்லை. முதலில் கெளரவ கொலைகளுக்கு காரணமே, கலப்பு திருமனம் என்ற சாதி மறுப்பு திருமணங்களே. அந்த சாதி மறுப்பு திருமணத்தின் படி காதல் திருமணம் செய்து கொண்ட ஆண் மற்றும் பெண்ணின் சாதி இரண்டுமே முற்று முழுதாக மறுக்க படுவதில்லை. மாறாக ஏதாவதொரு வடிவத்தில் ஆணின் சாதிய பின்புலத்திலுள்ள சாதிய பரிமாணமோ அல்லது பெண்ணின் சாதிய பின்புலத்திலுள்ள சாதிய பரிமாணமோ தான் தங்களது சந்ததிகளுக்கும் தொடர்ந்து வருகிறது. இதில் எங்கே சாதி ஒழிப்பு நடந்துள்ளது என்பதை பற்றி, சாதி ஒழிப்பு போராளிகள் என அடையாளப்படும் யாரும் விளக்கம் தருவதே இல்லை.

1 கருத்து:

  1. "சாதிய" பரிமாணம்னா என்ன? அப்படி உண்மையாகவே ஏதாவது இருக்கா? அம்மா அப்பாவிடமிருந்து குணாதிசயங்கள் வரலாம், அது வளர்ப்பின் முறையில் அவர்களுக்கு வந்திருக்கலாம்...

    பதிலளிநீக்கு