10 செப்டம்பர் 2014

நேர்மை தோற்பதில்லை!

காஞ்சிபுரத்தில் கோடிக்கணக்கில் கொள்ளை போன மணல்திருட்டை தடுத்ததோடு, அசுத்துமான குளிர்பானங்களை விற்ற ஒரு பன்னாட்டு குளிர்பான ஆலைக்கு மிக தைரியமாக சீல் வைத்தார். மதுரையில்
ரூ. 16,000 கோடி கல் குவாரி கொள்ளையை அம்பலப்படுத்தினார்.  1935ம் ஆண்டில் தொடங்கப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ. 11.5 கோடி நஷ்டத்தில் செயல்பட்டு கொண்டிருந்ததை ஒரே ஆண்டில் ரூ. 2.5 கோடி இலாபத்தில் செயல்பட வைத்தார்.

இப்படியெல்லாம் செய்த நேர்மையான ஓர் அரசு அலுவலருக்கு பரிசாக, இந்த வாரத்தின் 48 மணி நேரத்துக்குள் இரண்டு முறை பணிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார். தன்னுடைய 23 ஆண்டு பணிக் காலத்தில் 24 முறை இடமாற்றம் செய்யப்பட்டு கொண்டே இருக்கின்றார் ”லஞ்சம் தவிர்த்து! நெஞ்சம் நிமிர்த்து!” யென்ற வார்த்தைக்கு சொந்தக்காரரான திரு. உ.சகாயம் ஐ.ஏ.எஸ்.

ஒரு நபரை உயிரோட இருக்கும் போது உரிய அங்கீகாரம் கொடுக்காமல் கண்டு கொள்ளாமலே இருந்து விட்டு, இறப்புக்கு பின்னால் அவரு அப்படி- இப்படி, ஆகா - ஒகோ!ன்னு புகழ்வது தான் தமிழர்களோட குணமே. அந்த மாதிரியாகத்தான் திரு. உ.சகாயம் ஐ.ஏ.எஸ் விசயத்தில் தமிழர்களாகிய நாம் செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். :( 

“பொய் தான் பயப்படும்; உண்மை பயப்படாது!”ன்னு சொல்வாங்க. அதுபோல இத்தனை அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் நெஞ்சுறுதி குறையாமல், தான் காலடி எடுத்து வைக்கின்ற எந்த துறையிலும் அத்துறையை வளர்ச்சி பாதைக்கு மாற்றி தன்னுடைய முத்திரையை பதிக்கும் நேர்மையாளனுக்கு என் வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக