17 செப்டம்பர் 2014

தமிழன் ஆளட்டும்!

திரைத்துறையில் 'தயாரிப்பாளர் - இயக்குனர் - நடிகர் - கவிஞர் - இசையமைப்பாளர்' யென மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருந்த பலராலும், அவர்களது வாரிசுகளை அதே திரைத்துறையில் ஜொலிக்க வைக்க முடியவில்லை என்பதே எதார்த்தம். ஆனால், மிகப்பெரிய இயக்குனர்களாக இல்லாத போதும் திரு. எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் திரு. கஸ்தூரி ராஜா போன்றோரின் மகன்களான திரு. விஜய் மற்றும் திரு. தனுஷ் இருவரும் திரைத்துறையில் சாதித்திருப்பதை பார்க்கும் போது ஆச்சர்யமாகத்தான் இருக்கின்றது. திரைத்துறையில் வந்த புதிதிலிருந்து, பிறரின் ஏளனத்திற்கும் - புறக்கணிப்புகளுக்கும் - அவமானத்திற்கும் அதிகமாக ஆளானவர்கள் திரு. தனுசும் - திரு. விஜயும் தான். அவர்கள் பட்ட அந்த அவமானங்களே இன்றைக்கு அவர்களை மிகப்பெரிய ஆளாக்கி விட்டுருக்கின்றது.

இத்தனை பெரிய ரசிகர்கள் கூட்டத்தை இன்றைக்கு தனக்கு பின்னால் வைத்திருந்தும் கூட இன்னமும் திரு. விஜய் தரக்குறைவாகவே விமர்சிக்கப்பட்டு கொண்டிருக்கின்றார். அது வெறும் விமர்சனம் மட்டுமல்ல. காரணம் என்னவெனில், தமிழன் இனி தலையெடுத்து விடக்கூடாதென்ற வார்த்தைகளின் விசம் பலருக்கு தெரியாமலேயே அவர்களுக்குள் திணிக்கப்பட்டு ஒட்டுமொத்த தமிழர்கள் மீதும் அள்ளி தெளிக்கப்படுகின்றது. திரு. விஜயை எதிர்ப்பதற்கு பின்னால் ஆரிய சித்தாத்தங்களை கொள்கையாக கொண்ட ஊடகங்களின் பங்கும் பெருமளவு உண்டு என்பதை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என்பது தெரியவில்லை. சக தமிழனாக திரு. விஜய் அரசியலுக்கு வருவதுதான் சரியானதாக எனக்கு படுகிறது. அரசியலில் தலையெடுப்பதற்கான சரியான நேரமிது. இனியாவது தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளட்டும்!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக