13 செப்டம்பர் 2014

ஆண்களின் புலம்பலாகி போனதா திருமணம்?

பல ஆண்களின் புலம்பல், ”எங்கு தேடியும் பெண் கிடைப்பதே இல்லை” என்பதை விட, ”எங்கு போனாலும் பெண் கொடுப்பதில்லை” என்பது தான்.

இதற்கான காரணமாக சொல்லப்படும் பெண் சிசுக்கொலை என்பதையெல்லாம் நிச்சயமாக ஏற்க முடியாது. 1980-1990 இந்த பத்து வருடங்களில் பிறந்த ஆண்களுக்கு தான் திருமணத்திற்கான வரன் அமைய கொஞ்சம் சிக்கல் இருக்கு. மத்தபடி 90களுக்கு பிறகு பிறந்த எந்த ஆண்களுக்கும் திருமணத்திற்கான வரனாக அமையும் பெண் எளிதாக கிடைத்து விடும் சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஏனெனில்,  80களில்தான் ஆண்குழந்தை மீதான மோகம் பெற்றோர்களிடம்
அதிகம் இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் அது பெரும்பான்மையாக இல்லை.

திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் இருக்க முதல் காரணம், பெண்கள் மட்டும் தான். ஏனென்றால், ’வீட்டில் இருந்தால் துணி துவைக்கணும், வீட்டை கூட்டி பெருக்கி சமையல் செய்யணும், வெளிய கூட போக முடியாம வீட்டிற்க்குள்ளயே அடைஞ்சு கிடக்கணும்’ என்பதற்காகவே பெரும்பாலான பெண்கள் கல்லூரி (P.G) மேற்படிப்பை மேற்கொள்கிறார்கள்.

கல்லூரி வாழ்க்கையும், சமுதாய வளர்ச்சியும் இப்போதுள்ள பெண்களுக்கு ஒரு கனவுலக மாற்றத்தை கொடுத்து வருகிறது. எப்படியென்றால், ”வெளிநாட்டுல செட்டில் ஆகிற மாதிரியான மாப்பிள்ளை, ஐ.டி. துறையில் பெரும் தொகை சம்பளம் வாங்கும் மாப்பிள்ளை, வீட்டிற்கு ஒரே பையனாக இருக்கும் மாப்பிள்ளை, வீடு - தோப்பு - சொத்து பத்து நிறையா இருக்கிற மாப்பிள்ளை, முக்கியமா, தனக்கு நிகராவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ படிப்பை முடித்த மாப்பிள்ளை மட்டும் தான் தனக்கு கணவனாக வர வேண்டும்!” என்ற திருமண வயதை எட்டியுள்ள பெண்களின் கட்டளைகளால் தான், வெகுபலருக்கு திருமணம் தாமதமாகின்றது. இதை, நமது அக்கம் பக்கத்து வீடுகளிலும், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகளிலும் நேரடியாக காண முடிவதால், வலுவான ஆதாரத்தோடும் கூட இதைப்பற்றி விளக்க முடியும்.
விதிவிலக்குகள் எல்லா இடத்திலும் உண்டு. அதை மட்டுமே உதாரணம் காட்டி ”நான் அப்படி இல்லையே!, அவள் அப்படி இல்லையே! எங்கள் வீட்டில் நாங்க அப்படி நினைச்சதே இல்லை!”யென சில பெண்களை மட்டும் சுட்டிக்காட்டினால் அதற்கு அடியேன் பொறுப்பல்ல.
இதை தவிரவும், ’மணமகனின் நிறம் - சாதி உட்பிரிவு - சம்பளம் - வசிக்கும் ஊர்’ என்பதெல்லாம் திருமணத்திற்கான முக்கிய இடத்தை பிடிக்கின்றன. பெண்ணுக்கு வரன் தேடும் பெற்றோர்கள், வசதி அதிகமாக இருப்பின் தங்களுக்கு மருமகனாக வரப்போகும் ஆண்களின் சுய ஒழக்கம் பற்றி கவலைப்படுவதே இல்லை என்பது தான் வருத்தமான விசயம். ”குடி-புகை உட்பட பல தகாத பழக்கம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை; பணம் தான் எக்கசக்கமாக இருக்கின்றதே!” என்ற பொருளாதாரம் என்ற எண்ணத்தில் மட்டுமே தங்களது பெண்ணை திருமணம் செய்து வைக்கின்றனர்.

பெரும்பான்மையாக 80-90களில் உள்ள ஆண்களுக்கு திருமண தாமதம் ஏற்பட முழுக்க முழுக்க திருமண வயதுடைய பெண்களின் சுயநலம் நிரம்பிய சுகபோக மோகமும் - ஈகோவும், பெண்களை பெற்ற பெற்றோர்களின் பணம் மீதான தீராக்காதலும் தான் காரணமாக அமைகின்றது.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக