24 செப்டம்பர் 2014

செவ்வாய்க்கு அரோகரா!

பண்டைய தமிழர்களின் கடவுள் வழிபாடானது, ”மாயோன் - சேயோன்” என்ற இரு கடவுள்களை மையப்படுத்தியே இருந்தது. இங்கே, மாயோன் என்றால் பெருமாள்; சேயோன் என்றால் முருகன்.

சேய் - செவ்வாய் = (முருகனுக்கு உகந்த) கிழமை
சேய் - சிவப்பு =  (ராசி, கிரக, உடை) நிறம்
சேய் - செம்மை = (அழகின் வடிவமான) கந்தன்
சேய் - சேயோன் = (ஆதி தமிழ்கடவுள் பெயர்) முருகன்
சேய் - சேவல் = (அடையாள இலச்சினையுடன் கூடிய )கொடி
சேய் - குழந்தை  = (பாலகன், இளையவன்) குமரன்

தமிழ் இலக்கியங்களில், குறிஞ்சி நிலத்தின் கடவுளாகவே முருகன் குறிப்பிடப்படுகிறார். மேலும், ஜோதிடத்தில் ”மேஷம் - விருச்சிகம்” என்ற இரு ராசிகளுக்கும் அதிபதியாக செவ்வாய் இருக்கின்றார். அந்த செவ்வாய்க்கான கடவுளாக முருகன் விளங்குகின்றார். தமிழ் வழி பார்த்தாலும், சமகிருத வழி பார்த்தாலும், இன்னும் எப்படி பார்த்தாலும் செவ்வாய்க்கும் முருகனுக்கும் உள்ள தொடர்பை யாராலும் மறுக்க முடியாது.

அப்படிப்பட்ட செவ்வாய் கிரகத்திற்குள், முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக நுழைந்துள்ள 'Mars Orbiter Mission'  என்ற ’மங்கள்யான்’ செயற்கை கோளின் திட்ட இயக்குநரான திரு. சு.அருணன் உள்ளிட்ட அனைத்து ISRO விஞ்ஞானிகளுக்கும், மெய்ஞானத்தையும் - விஞ்ஞானத்தையும் ஒன்று சேர்ந்த இந்நாளில் எம் வாழ்த்துகள்!

முருகனுக்கு அரோகரா! கந்தனுக்கு அரோகரா!

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக