12 செப்டம்பர் 2014

இன்றைய தமிழ்நாட்டின் நிலை?!

ஊரெங்கும் டாஸ்மாக் கடைகளை திறந்து இலக்கு வைத்து விற்பனை செய்து தமிழனை போதைக்கு அடிமையானவனாகவும், எல்லாவற்றையும் ’விலையில்லா’ என்று சொல்லி தமிழனை இலவசத்திற்காக ஏங்கும் பிச்சைக்காரனாகவும் ஆக்கிவிட்டு, பொருளாதார உற்பத்தி குறித்த மத்திய புள்ளி விவரயியல் பட்டியலில், 03.39 சதவீத வளர்ச்சியுடன் தமிழ்நாடு கடைசி இடத்தைப் பெற்றிருக்கிறது என்றால், அது ஆட்சியாளர்களின் ஆளுமைத்திறனைத்தான் வெளி காட்டுகின்றது. ”போலியான விளம்பரங்களால், உண்மையான வெற்றியை பெற்றுவிட முடியாது!” என்பதற்கான எளிய உதாரணம்தான் இது. பீகார் கூட 10.23 சதவீத வளர்ச்சி பெற்றிருக்கிறது. தமிழன் விழித்து கொள்ளாத வரை தமிழனுக்கு தான் வெட்கக்கேடு.

இது ஒரு புறம் இருக்க,


வேட்பாளரை பயத்தால் மிரட்டி, பலம் கொண்டு கடத்தி, பணத்தால் வாபஸ் பெற செய்து அன் அப்போஸ்டாக வெற்றி பெறுவது ஒரு வழி. இல்லையென்றால், வாக்களர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெறுவது மற்றொரு வழி. இது இரண்டுமே முடியாத பட்சத்தில், வெற்றி பெற்ற மாற்றுக்கட்சி வேட்பாளரை பணம்/பதவி ஆசை காட்டி தன் பக்கம் இழுத்து ஒட்டுமொத்த வெற்றியையும் தன்வசமாக்குவது கடைசி வழி. இது தான் தற்போதைய அதிமுக ஃபார்முலா!

பலமான எதிர்கட்சியாக உருவெடுக்க தமிழக பா.ஜ.க.விற்கு தகுதி இருப்பது போல தெரியவில்லை. உட்கட்சி பூசலால் தனக்கு தானே அழிவை தேடிக்கொண்டு, மீண்டுமொரு சத்தியமூர்த்தி பவனாக தான் கமலாலயமும் மாறும் போல.சரியான - நம்பிக்கையான - வீரமான - உணர்வான - விசுவாசமான ஒரு வேட்பாளரை கூட தேர்ந்தெடுக்க முடியாத வக்கற்ற நிலையையில் தமிழக பா.ஜ.க இருக்கிறதென்றால், அதன் வருங்காலமும் கடந்தகால காங்கிரஸ் போலத்தான் முடியும்.

இந்த இழவுக்காக தான் தமிழக வாக்களர்கள், ’அதிமுக வேண்டாம்னா திமுக! திமுக வேண்டாம்ன்னா அதிமுக!’ன்னு ஒரு தெளிவான முடிவுக்கு வந்துடுறாங்க போல.


- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக