07 நவம்பர் 2018

வடக்கத்தியர்களின் தீபாவளி அரசியல்!


செளகார்பேட்டை போன்ற வடமாநிலத்தவர்கள் வாழும் பகுதிகளிலெல்லாம் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. வடக்கத்தியர்கள், இன்று தொடர்ச்சியாக மணிக்கணிக்கில் வெடிகளை வெடித்து வருகின்றனர். இது சுற்றுச்சூழல் மாசு இல்லையா? நீதிமன்ற தீர்ப்பை மீறியதாக, நேற்று ஆயிரக்கணக்கான வழக்குகளை பதிந்த காவல்துறை, இன்று வடக்கத்தியர்கள் மீது வழக்கு பதியாதது ஏன்? இன்று மகாவீரரின் நினைவுநாள் என்பதால், ஈரோடு சென்னையென தமிழகத்தில் வடக்கத்தியர்கள் ஆளுமை செலுத்தும் பகுதிகளெல்லாம் இறைச்சி விற்க அரசு தடையை விதித்தது ஏன்? பொதுவாகவே அமாவாசையில் பெரும்பாலானோர் அசைவம் சமைப்பதில்லை என்பதே எதார்த்தம்.


வடக்கத்திய வணிகர்கள் சைவர்களென்றால், அவர்கள் அசைவம் சாப்பிடாமல் இருக்கலாமே தவிர, இங்குள்ள தமிழர்கள் யாருமே இன்றைக்கு அசைவம் சாப்பிடக்கூடாதென்பது அயோக்கியத்தனமான அரசியல் இல்லையா? இதுபோன்ற வந்தேறிகளின் உள்ளரசியலை எதிர்ப்பவர்களையெல்லாம், இன/மொழி வெறியர்களாக இங்குள்ளவர்களே சித்தரிக்கின்றனர் என்பதும் வேதனையான விசயம். இனி காலத்தின் தேவை இம்மண்ணுக்கான, இம்மக்களுக்கான தமிழ்தேசிய அரசியலே.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக